இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி ரத்து!
கொழும்பு:
இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிமழை காரணமாக கைவிடப்பட்டது. நாளை 2 வது போட்டி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட்தொடர், மழை மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் குண்டுவெடிப்பு பீதி காரணமாகநடைபெறாமல் போய் விட்டது.இதையடுத்து இந்தியாவும், இலங்கையும் 3 ஒரு நாள் போட்டிகளில்விளையாடமுடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முதலாவது போட்டிநடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
டாஸ்வென்று இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் மழைகுறுக்கிட்டதால் 3.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி இன்றைக்குஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் இன்றும் மழை காரணமாக ஆட்டத்த்ை தொடர முடியவில்லை. இதனால்ஆட்டத்தை ரத்து செய்ய நடுவர்கள் முடிவெடுத்தனர். பிற்பகல் 11.30 மணிக்குஇறுதியாக நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்துபோட்டியைக் கைவிட முடிவெடுத்தனர்.
நாளை 2வது போட்டி நடைபெறவுள்ளது. ஆனால் மழைதொடர்ந்தகொண்டிருப்பதாலும், மைதானத்தில் ஈரப்பதம் குறையாமல் இருப்பதாலும் நாளையபோட்டியும், 3வது போட்டியும் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
கைவிடப்பட்ட முதலாவது போட்டியில் இந்தியா விளையாடிய சிறிது நேரத்தில்விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்திருந்தது.டெண்டுல்கர் 2 ரன்களும், டிராவிட் 9ரன்களும் எடுத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications