தாஜ்மஹாலை தகர்க்கப் போவதாக மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த கடிதத்தை தொடர்ந்துதாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உ.பி.மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த காவல்துறை உயர்அதிகாரி ஜுனேஜோவுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.இந்தியில் எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில், உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போகிறோம். இதை முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.இதையடுத்து தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார்குவிக்கப் பட்டுள்ளனர். ஆக்ராவிலிருந்து ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தாஜ்மஹாலின் பல பகுதிகளில் ரகசியக் கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதம் குறித்து தீவிர ஆய்வு நடந்து வருவதாகவும், அல்கொய்தா அமைப்பின் பெயர் இக் கடிதத்தில்கூறப்பட்டிருப்பதால் அந்த அமைப்புக்கும், இந்த மிரட்டலுககும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணைநடந்து வருவதாக உத்தரப்பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications