திருப்பதி: சென்னை பயணிகள் 10 பேர் விபத்தில் பலி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

சென்னையிலிருந்து திருப்பதிக்குச் சென்ற தமிழக அரசுப் பேருந்து கண்டெய்னர் லாரியுடன் மோதியதில், 3பெண்கள் உள்பட 10 பேர் பலியாயினர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து நேற்று நள்ளிரவில் திருப்பதிக்குப்புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் நகரி அருகே தடுக்கடா என்ற இடத்தில் பேருந்துசென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியுடன் பயங்கரமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.இவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 14 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் புத்தூர் மற்றும் திருப்பதி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்கள் விவரம்:

வெங்கடேஷ்(2), மகாலட்சுமி (5) (இருவரும் அக்கா, தம்பி), ஆதிலட்சுமி (30), தையல்நாயகி (35), பூமாதேவி(30), ராஜ்குமார் (30) இவர்கள் அனைவரும் சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 4 பேர் குறித்தவிவரம் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+