2 வயது சிறுமி மீது கொலை முயற்சி வழக்கு!
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மாரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது அந்த மாநிலததில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம மாவட்டம் மாரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அபர்ணா. இந்த 2வயது சிறுமியின் தாய், தந்தை,பாட்டி மீது சொத்துத் தகராறு காரணமாக ஒருவரை தாக்கியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதில் கொடுமை என்னவென்றால் இந்த வழக்கில் அபர்ணாவையும் போலீஸார் சேர்த்துள்ளனர். கேரளாவில்பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது இந்த விவகாரம். தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் கொடுத்த புகாரின்அடிப்படையில் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் உதவி சப்இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
தனது தாய், தந்தை, பாட்டியுடன் சேர்ந்து அந்த நபரை அடிக்கப் பாய்ந்தாளாம் அபர்ணா என்று போலீஸார் பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், இது தொடர்பாக விசாரைண நடந்து வருகிறது.முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த அதிகாரி மெத்தனமாக இருந்தது தெரிய வந்துள்ளது. அவர் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்திய குற்றவியல் சட்டத்தின் 82வது பிரிவு 7 வயதுக்கு கீழ் உளள குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்யக்கூடாது என்று கூறுகிறது. ஆனால் கேரள காவல்துறை இதை மீறி புதிய சாதனை படைத்துள்ளது.












Click it and Unblock the Notifications