பாலஸ்தீன துணை பிரதமரைக் கைது செய்த இஸ்ரேல்!

Subscribe to Oneindia Tamil

ரமல்லா:

பாலஸ்தீன துணை பிரதமர் நாசர் ஷயீரை இஸ்ரேல் ராணுவம் திடீரெனக் கைதுசெய்துள்ளது.

பாலஸ்தீனத்தில் தற்போது ஹமாஸ் இயக்கத்தின் ஆட்சி நடந்து வருகிறது. இந்தஅமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ்அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானி பிரமதராகவும், நாசர் ஷயீப் துணைபிரதமராகவும் உள்ளனர். பல அமைச்சர்களும் ஹமாஸ் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள்தான்.

இந்த நிலையில் இஸ்ரேலின் தெற்குப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஜூன் மாதம் கடத்திச் சென்றனர்.இதையடுத்து ஹமாஸ் அமைப்ப்ைச சேர்ந்த 6 எம்.பிக்கள் உளிட்ட 28 பேரைஇஸ்ரேல் ராணுவம் சிறை பிடித்துள்ளது.

இந்த நிலையில் துணை பிரதமரையும் தற்போது கைது செய்துள்ளது.ரமல்லா நகரில் உள்ள தனது வீட்டில் ஷயீப் இருந்தபோது அவரை ராணுவ வீரர்கள்சிறை பிடித்துச சென்றுள்ளனர். இதற்கு பாலஸ்தீன நிர்வாகம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன நிர்வாகததை முடக்கி அனைத்து அமைச்சர்களையும் கைது செய்யஇஸ்லேரல் திட்டமிட்டுள்ளதாக பாலஸ்தீனம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+