விடுதலைப் புலிகளின் படகுத் தளம் அழிப்பு: ராணுவம்
கொழும்பு:
தெற்கு யாழ்ப்பாணத்தில் நடந்த கடும் சண்டையில் விடுதலைப் புலிகளின் படகுகட்டும் தளம் முற்றிலும் தகர்க்கப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.ஆனால் இதை புலிகள் மறுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளில் கடும் சண்டை நடந்து வருகிறது. இதுதவிரகமலை, நாகர்கோவில்உள்ளிட்ட இடங்களிலும் சண்டை வலுத்துள்ளது.இ ந்த நிலையில், தாளயாடியில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான படகு தளம் மீதுராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. விமானப் படை விமானங்களும் சரமாரியாககுண்டுகளை வீசித்தாக்கின. இதில் படகு தளம் முழுமையாக சேதமடைந்து விட்டதாககூறப்படுகிறது. 40 படகுகளும் இதில் சேதமடைந்தன.
ஆனால் இத்தகவலை புலிகள் மறுத்துள்ளனர். அந்த படகு தளம் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான தல்ல. தனியாருக்கு சொந்தமானது. அங்கு 2 அப்பாவிபொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்று புலிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐஸ்லாந்துதனது குழுவின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. தற்போது இக் குழுவில் 6பார்வையாளர்கள் இருந்தனர். அதை 10 ஆக உயர்த்த அந்நாடு முடிவு செய்துள்ளது.இதே போல நார்வே உறுப்பினர்கள் எண்ணிக்கையும் 16 லிருந்து 20 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications