புலி ஆதரவு பேச்சு: மதிமுக மா.செ. கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசியதாக கூறி தென் சென்னைமாவட்ட மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.

இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 17ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலை சிறுத்தைகள்கட்சி சார்பில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன்தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

இலங்கையில் செஞ்சோலையில் 61பள்ளிக்குழந்தைகள் படுகொலைசெயயப்பட்டதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டுபேசிய சென்னை மாவட்ட விடுதலைச் சிறுத்தை பொருளாளர் கடம்பன் பேசுகையில்,

இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படவில்லையென்றால், தமிழ்நாட்டைஇந்தியாவின் வரைபடத்திலிருந்து எடுக்க திருமாவளவன் தலைமையில் போராட்டம்நடத்த வேண்டியிருக்கும் என்று பேசினார்.

தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன் பேசுகையில்,ஈழத்தமிழ் மக்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக ஏ.கே.47 துப்பாக்கியைதாங்கியும் போராட தயாராக இருக்கிறோம். முடிவை நீங்கள் எடுக்கவில்லை எனறால்,தனித் தமிழ்நாடு கேட்க வேண்டிய போராட்டம் வெடிக்கும் என்றும் பேசியுள்ளார்.

இந்தப் பேச்சுக்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் குந்தகம்விளைவிக்கும் பேச்சுக்கள் ஆகும். மேலும தடைசெய்யப்பட்ட அமைப்புக்குஆதரவாக பேசியாதல் இவர்கள் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வேளச்சேரி மணிமாறன் கைது செய்யப்படடார். பின்னர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடம்பன் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

வேளச்சேரி மணிமாறன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் நுங்கம்பாக்கம்காவல் நிலையத்தின் முன்பு மதிமுகவினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால்அங்கு சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 9 மதிமுகவினரைபோலீஸார் கைது செய்தனர்.

வைகோ கண்டனம்:

இதற்கிடையில் மணிமாறன் கைதுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 21ம் தேதி சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கு மதிமுக ஏற்பாடு செய்துள்ளது.இதை சீர்குலைக்கும்முகமாகத்தான் மணிமாறனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இருப்பினும் திட்டமிட்டபடி ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நிச்சயம் நடந்தே தீரும்என்று கூறியுள்ளார் வைகோ.

தற்போதைய ஆட்சியில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைதுசெய்யப்பட்டுள்ள முதல் நபர் மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+