திருப்பதி: மதமாற்றப் பிரசாரம் செய்தால் 2ஆண்டு சிறை!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதியைச் சுற்றிலும் மதமாற்றப் பிரசாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஆந்திரமுதல்வர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அருகே வேத பல்கலைக்கழகம் அமைக்க ஆந்திர அரசுமுடிவு செய்துள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் ராஜசேகர் ரெட்டி பேசுகையில்,திருப்பதி கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிறிஸ்தவ மத பிரசாரம் நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளன.இதை அனுமதிக்க முடியாது. இந்துமத சம்பிரதாயங்கள், பாரம்பரியத்தை காக்க ஆந்திர அரசு தீவிர நடவடிக்கைஎடுத்து வருகிறது.
திருப்பதி சுற்றுப்புறங்களில் வேற்று மத பிரசாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றார் ரெட்டி.












Click it and Unblock the Notifications