ஆபாச படம்: பெண்ணை மிரட்டிய பாதிரியார்
விழுப்புரம்:
பிரார்த்தனைககாக சர்ச்சுக்கு வந்த பெண்மீ து ஒருதலைக் காதல் கொண்ட பாதிரியார்,தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண்ணை மிரட்டியதால் கைதுசெயய்ப்பட்டார்.
விழுப்புரம் சாலை அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபா மார்க்கரெட். இவர்இந்திராநகர் சித்தேரியில்உள்ள சர்ச்சுக்கு செல்வார். அங்கு பாதிரியாராக இருந்த ஜான்உதயக்குமார் என்பவருடன் ஷோபாவுக்கு நட்பு ஏற்பட்டது. மனைவியைப் பிரிந்துவாழ்ந்த வந்த ஜான் உதயகுமாருக்கு ஷோபா மீது காதல் ஏற்பட்டது.
தனது காதலை ஷோபாவிடம வெளிப்படுத்தாமல் ஒரு தலையாகக் காதலிதது வந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் காதலை ஷோபாவிடம் வெளிப்படுத்தி தன்னை மணந்துகொள்ளுமாறு கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த ஷோபா, நான் உங்களிடம் அந்தஎண்ணத்தில் பழகவில்லை என்று கூறியுள்ளார்.
இருந்தாலும் விடாத ஜான் உதயக்குமார், ஷோபாவின் தந்தையிடம் சென்று தனக்குஷோபாவை கல்யாணம் செய்து வைக்குமாறுகூறியுளிளார். அதை அவர்ஏற்கவில்லை.
இந் நிலையில் ஷோபாவின் புகைப்படங்கள் சிலவற்றை தன்னிடம வைததிருந்தபாதிரியார், அவர்றை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமான படங்களாக மாற்றி, அதைஷோபாவிடம் காட்டி மிரட்டியுள்ளார்.
நீ என்னை மணம் செய்ய மறுத்தால் இதை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன்என மிரட்டியுள்ளார்.
பாதிரியாரின் மிரட்டல்கள் அதிகரித்துததால் தனது தந்தையுடன் அனைத்து மகளிர்காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார் ஷோபா.
அதேசமயம் பாதிரியாரும் வளவனூர் காவல் நிலையத்தில் ஷோபா மீது புகார்கொடுத்தார். தனது கம்ப்யூட்டரை ஷோபா திருடி விட்டதாக புகாரில் அவர்கூறியிருந்தார்.
இந் நிலையில், ஷோபாவின் வீட்டிற்கு சென்ற பாதிரியார் அவரையும், அவரது தந்தைஎபனேசரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவேன் என்றுமிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஷோபாவின் தந்தை எபனேசர் விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் பாதிரியாரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications