கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருது: கலாம் வழங்குகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருதுவழக்கப்படவுள்ளது. இவ்விருதை குடியரசுத் தலைவர் ஏபிஜே.அப்துல் கலாம் சென்னையில் செப்டம்பர் 4ம் தேதிநடைபெறும் விழாவில் வழங்குகிறார்.

இதுகுறித்து ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் இராம.வீரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழ் இலக்கியத் துறையில் சிறப்பான தொண்டாற்றியவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தொல்காப்பியர் விருதுவழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் ஆண்டு விருதை, தொல்காப்பியபூங்கா எழுதிய முதல்வர் கருணாநிதிக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரத் தலைவர் அப்துல்கலாம், கருணாநிதிக்கு இவ்விருதினை வழங்குகிறார். ரூ.1 லட்சம் ரொக்கமும், தொல்காப்பியர் உருவம் பொறித்ததங்கப் பதக்கமும், வெள்ளியால் ஆன பட்டயமும் இவ்விருதில் அடக்கும்.

வழக்கமாக தகுதிச் சான்றினை எழுத்துகளில் வடித்துப் பட்டயம் வழங்கும் முறையை மாற்றி ஓவிய வடிவில்பட்டயம் வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது.

3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ் இலக்கியம் படைத்த தொல்காப்பியர் உருவமும், தற்காலத்தில்வாழ்நாள் முழுவதும் படைப்பிலக்கியம் படைத்து வரும் கருணாநிதியின் எழுதுகிற தோற்றமும் தகுதிப்பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள வாழ்வியல் நிகழ்ச்சிகளை விளக்கும் உருவங்கள் இதில் வெள்ளியில்பொறிக்கப்பட்டுள்ளன என்றார் வீரப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+