பறக்கும் விமானத்தில் சென்னை பெண்ணிடம்கேரள அமைச்சர் சில்மிஷம்
திருவனந்தபுரம்:
சென்னையிலிருந்து கொச்சிக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடம்,கேரள அமைச்சர் ஜோசப் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 3ம் தேதி சென்னையிலிருந்து கொச்சிக்கு கிங்பிஷர் விமானம் சென்றது.அதில் கேரள பொதுப் பணித்துறை அமைச்சர் ஜோசப் பயணம் செய்தார். அவருக்குமுன் இருக்கையில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் அமர்ந்திருந்தார்.
![]() |
விமானம் டேக்-ஆப் ஆகும்போது உள்ளே விளக்குகள் டிம் செய்யப்பட்டன.அப்போது தனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணை சீட்களுக்கு இடையேகையை விட்டு அந்த விஐபி கட்டிப் பிடித்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் எழுந்து கத்தவே ஏர்-ஹோஸ்டஸ் ஓடி வந்துள்ளார்.தன்னை பின்னால் அமர்ந்திருப்பவர் கட்டிப் பிடித்ததாக அந்தப் பெண் கூறவே,அந்தப் பெண்ணை வேறு சீட்டில் அமர வைத்துள்ளார் ஏர் ஹோஸ்டஸ்.
இந்த வேலையைச் செய்தது அமைச்சர் என்பதால் அமைதியாகிவிட்ட ஏர் ஹோஸ்டஸ்இந்த விஷயத்தை பைலட்டிடமும் கூறியுள்ளார்.
விமானம் கொச்சியை அடைந்ததும் அந்தப் பெண் தன்னை கட்டிப்பிடித்த அந்த நபரைமுறைத்துள்ளார். ஆனால், அமைச்சரோ ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பேப்பர்படித்துக் கொண்டிருந்தாராம்.
இதையடுத்து கொச்சியில் தரையிறங்கியதும் அந்தப் பெண் விமான நிலையஅதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தை மூடி மறைக்கஅதிகாரிகள் மட்டத்தில் பெரும் முயற்சி நடந்துள்ளது. இருப்பினும் இப்போதுவெளியில் கசிந்துவிட்டது.
இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அந்தப் பெண் மிரட்டப்பட்டதாகவும்தெரிகிறது.
மேலும் இந்தச் சம்பவம் நடந்தது உண்மை தான் என கிங்பிஷர் விமானத்தின்பைலட்டும் கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் தன் மீதான ஊழல் வழக்கில் இருந்து அமைச்சர் ஜோசப்விடுதலையானார். இந் நிலையில் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் கேரளாகாங்கிரஸ் (ஜோசப் பிரிவு) கட்சியின் மாநிலத் தலைவரான இவர் இப்போதுஇடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்று அமைச்சராக உள்ளார்.
இடுக்கி மாவட்ட தொடுபுழா தொகுதியைச் சேர்ந்த ஜோசப், தன் மீதான இந்தப்புகார்களை மறுத்துள்ளார். இது ஒரு அரசியல் சதி என்று கூறியுள்ளார்.
இது குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுகையில், இது தொடர்பாக புகார்வந்தால் விசாரிப்பேன் என்றார்.
இதற்கிடையே, அச்சுதானந்தன் தனது கொச்சி பயணத்தை ரத்து செய்துவிட்டுதிருவனந்தபுரத்திலேயே உள்ளார். ஜோசப்பை சந்திக்கத்தான் அவர் தனது பயணத்தைரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஆன்லைனிலேயே தமிழ் கற்கலாம்.. வெளிமாநிலம் - வெளிநாட்டில் உள்ளோருக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!













Click it and Unblock the Notifications