பெப்சி-கோக்கில் நச்சு இல்லை: அன்புமணி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பெப்சி, கோக் போன்ற குளிர் பானங்களில் நச்சுக் கொல்லிகளோ, பூச்சி மருந்தோஇல்லை என மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் பெப்சி, கோக் குளிர்பானங்களில் அளவுக்குஅதிகமான பூச்சி மருந்து நச்சுகழிவுகள் இருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல்ஆய்வு மையத்தின் சுனிதா நாராயணன் என்பவர் பிரச்சனை கிளப்பினார்.இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் பெப்சி, கோக்குக்குதடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பல மாநில நீதிமன்றங்களில் வழக்கும்நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பெச்சி, கோக் குளிர்பானங்களில் பூச்சி மருந்து இல்லை எனஅன்புமணி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
டாக்டர் டி.கனுங்கோ தலைமையிலான ஆய்வுக் குழு 14 மாநிலங்களில் இருந்து 213சாப்பிள்களை எடுத்து சோதித்தது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மிக குறைவாகத்தான் பூச்சி மருந்து கழிவு இருப்பது இச்சோதனையில் தெரிய வந்தது.
பெப்சி, கோலாவில் அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்து கழிவுகள் இருப்பதாகவெளியான தகவல் நிபுணர்கள் ஆய்வில் நிரூபணம் ஆகவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications