மதம் மாறி வருத்தப்படும் கமலா தாஸ்: தஸ்லிமா
திருவனந்தபுரம்:
பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா, இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்காகவருத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக பிரபல வங்கதசே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன்கூறியுள்ளார்.
தனது லஜ்ஜா புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட பத்வா காரணமாக வங்கதேசத்திலிருந்துதப்பி இந்தியாவில் வசித்து வருகிறார் தஸ்லிமா நஸ்ரீன்.திருவனந்தபுரத்தில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்ட தஸ்லிமாபேசுகையில்,
நான் கொச்சி சென்று கமலா சுரய்யாவை சந்தித்தேன். அவர் ஒரு தவறு செய்துவிட்டார். மதம் மாறியது தான் அவர் செய்த தவறு. இதை அவரிடமே கேட்டேன், ஏன்இப்படிச் செய்தீர்கள் என்று. அதற்கு அவர் பதில் ஏதும் தரவில்லை.
மதம் மாறியதற்காக வருத்தப்படுகிறீர்களா என்று நான் கேட்டபோது ஆமாம் என்றுதலை அசைத்தார். இஸ்லாமிய மதத்தில் கூட பெண்களுக்கு சமத்துவம்கிடைக்கவில்லை என்பதை அவர் இப்போது உணர்ந்துள்ளார் என்றார் நஸ்ரீன்.
கமலாதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட கமலா, சில ஆண்டுகளுக்கு முன்பு கமலாசுரய்யா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு இஸ்லாமுக்கு மாறினார் என்பதுகுறிப்பிடத்தக்கது..
இந் நிலையில் தஸ்லீமா நஸ்ரீனின் பேச்சு கேரளாவில் பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது. அவரை உடனடியாக கேரளாவை விட்டு வெளியேற்ற வேண்டும்என அம் மாநில இஸ்லாமிய அமைப்புகள் கோரியுள்ளன.












Click it and Unblock the Notifications