ரூ100 கோடி முதலீடு-சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு 10 ஆண்டு வரி விலக்கு: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் ரூ.100 கோடி வரை முதலீடு செய்யும் கம்ப்யூட்டர், சாப்ட்வேர்நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்குஅளிக்கப்படும் எனமுதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று தொழில் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறைமானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தாக்கல் செய்து முதல்வர்கருணாநிதி பேசுகையில்,சென்னை தரமணியில் 2வது டைடல் பூங்காஅமைக்கப்படும். கோவையிலும் ஒருதகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கபடும். தமிழகத்தில் ரூ.100 கோடிக்குமுதலீடு செய்யும் கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு பொது மற்றும் விற்பனைவரியிலிருந்து 10 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.
இலவச டிவி வழங்கும் திட்டம் செப்டம்பர் முதல் வாரதத்திலிருந்து தொடங்கப்பட்டுதொடர்ந்து செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக வழங்கப்பட உள்ள 30,000 கலர்டிவியை கொள்முதல் செய்ய ரூ. 9 கோடி தவிர, கூடுதலாக இந்த திட்டத்துக்கு ரூ. 750கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் 3 ஆண்டுகளில் அனைத்து பள்ளிகளுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும்.அரசுத்துறை செயலாளர்கள், துணை தலைவர்கள், கலெக்டர்கள் ஆகியோருக்கு லேப்டாப் வழங்க ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பழங்கால ஓலைச் சுவடிகளை கம்ப்யூட்டர் மூலம் அட்டவணைப்படுத்தநடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications