தஞ்சையில் தமிழிசை மாநாடு இன்று தொடக்கம்
தஞ்சாவூர்:
தமிழிசை குறித்த சர்வதேச மாநாடும், கருத்தரங்கமும் இன்று தஞ்சாவூரில்தொடங்குகிறது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் இந்த மாநாட்டுக்கும்,கருத்தரங்கத்திறகும் ஏற்பாடு செய்துள்ளது.
பல்கலைக்கழக கரிகால் சோழன் அரங்கத்தில் மாநாடு இன்று தொடங்குகிறது.இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியன் கூறுகையில்,தமிழிசைதான், பல்வேறு இசை வடிவங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தள்ளது.எனவே தமிழிசைதான் மிகவும் பழமையான இசை வடிவமாகும்.
தொல்காப்பிய காலத்திற்கு முன்பே எண்ணற்ற தமிழிசைக் கலைஞர்கள்வாழ்ந்துள்ளனர். சர்வதேச அரங்கில் தமிழிசையின் பெருமையையம்,பாரம்பரியத்தையும் வெளிப்படுததும் முகமாகவே இந்த மாநாட்டிற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளிலிருந்து 120க்கும் மேற்பட்ட அறிஞர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். சக்தி குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் பொள்ளாச்சிஎன்.மகாலிங்கம் தொடக்க உரையாற்றுகிறார்.
தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு மலரை வெளியிடுகிறார். சென்னைபாரம்பரிய இசை மைய இயக்குனர் துர்கா, முக்கிய உரை நிகழ்த்துகிறார் என்றார்சி.சுப்பிரமணியன்.












Click it and Unblock the Notifications