விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம்: அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்:
சென்னையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில் முன்னாள் தனியார் டிவி நிறுவனசெய்தி வாசிப்பாளர் லட்சுமி கோபகுமாரிடம் சில்மிஷம் செய்ததாக சர்ச்சையில்சிக்கியுள்ள கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் விவகாரம் குறித்துவிசாரணைக்கு அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் உத்தரவிடடுள்ளார்.
![]() |
சென்னையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில், பயணம் செய்த லட்சுமிகோபகுமாரை, அவரது இருக்கைக்குப் பின்புறம் இருந்து கையை விட்டு சில்மிஷம்செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜோசப். இந்தப் புகாரை அவர் மறுத்துள்ளார்.இதுஅரசியல் சதி எனவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் அச்சுதானந்தனையும் சந்தித்து விளக்கினார். என் மீதானபுகார் நீரூபிக்கப்பட்டால் நான் அரசியலிலிருந்து விலகுகிறேன் என்றும் சவால்விட்டார். இந்தநிலையில், மகளிர் காங்கிரஸ் இப்பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டது. பிரச்சினையை பெரிதுபடுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
![]() |
இதனால் ஜோசப் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமேலிடம் அச்சுதானந்தனை அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்துஅமைச்சரவைக் கூட்டத்தை அச்சுதானந்தன் கூட்டி விவாதித்தார். அந்த கூட்டத்திற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஐ.ஜி.சந்தியா இந்தப் புகார் குறித்து விசாரிக்கவுள்ளார்.10 நாட்களில் என்னிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார். விசாரணை முடிந்துமுடிவுகள் தெரியும் வரை ஜோசப் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது.
அவர் தொடர்ந்து அமைச்சராக செயல்படுவார். இந்தப் பிரச்சினை தொடர்பாகசம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்துள்ள பேட்டியை நான் சாதாரணமாகஎடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அமைச்சர் ஜோசப் மீதான விவகாரத்தைஅமைச்சரவை விவாதித்தாலும் கூட விசாரணை நடத்த உத்தரவிட்டது எனது சொந்தவிருப்பத்தின் பேரில் தான் என்றார் அச்சுதானந்தன்.














Click it and Unblock the Notifications