எம்பியை அடிக்க பாய்ந்த லாலுவின் மச்சான்
டெல்லி:
லோக்சபாவில் இன்று ஐக்கிய ஜனதாதள எம்.பி. பிரபுநாத்சிங்கை, லாலு பிரசாத்யாதவின் மைத்துனரும், ராஷ்டிரீய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி) எம்.பியுமான சாதுயாதவ் அடிக்கப் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லாலு கட்சி எம்.பிக்கள்ஒரு மைக்கையும் உடைத்து ரகளை செய்தனர்.
பிரபுநாத் சிங் இன்று காலை லோக்சபாவில்பேசுகையில்,பீகார் அரசியல் விவகாரத்தில்சில மத்திய அமைச்சர்கள் சட்டவிரோதமாக தலையிடுவதாக குறிப்பிட்டார்.சபைக்கு சம்பந்தம் இல்லாமல் பிரபுநாத் பேசுவதாக கூறி அவர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
இந் நிலையில், ஆர்.ஜே.டி. எம்.பிக்கள் பிரபுநாத் சிங்கை நோக்கி பாய்ந்தனர். சிலர்சபையின் மையப் பகுதிக்கு விரைந்தனர். இதையடுத்து சபையை ஒத்திவைப்பதாககூறி சபாநாயகர் எழுந்து சென்றார்.
ஆனால் ஆர்.ஜே.டி.எம்பிக்களின் கோபம் ஓயவில்லை. லாலு பிரசாத் யாதவின்மைத்துனர் சாதுயாதவ் படுகோபமாக பிரபுநாத் சிங்கை நோக்கிப் பாய்ந்தார்.
அவருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.பின்னர் தனது கையை மடக்கிபிரபுநாத் சிங்கை அடிக்கப் பாயந்தர். பிரபுநாத்சி ங்கும், சாதுவை திருப்பி அடிக்கத்தயாரானார்.
அவர்களை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தடுத்ததோடு, அவைக் காவலர்களைஉள்ளே வரவழைத்தார். கடும்முயற்சிக்குப் பின்னர் இருதரப்பு எம்.பிக்களையும்அவர்கள் விலக்கிவிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் ஆர்.ஜே.டி. எம்.பிக்களில் ஒருவர் பத்திரிக்கையாளர்கள் அமர்ந்திருந்தபகுதிக்குச் சென்று மைக்கை பிடுங்கி, பாஜக உறுப்பினர்களை நோக்கி வீசினார். அந்தமைக் ஒரு பாஜக எம்.பியின்முழங்காலில் பட்டு விழுந்தது.
இதையடுத்து கோபமடைந்த பாஜக எம்.பிக்கள் தங்களது டேபிளில் இருந்தகோப்புகளில் இருந்த காகிதங்களை நாலாபுறமும் வீசினர். கிட்டத்தட்ட அரைமணிநேரம்இந்த ரகளை நடந்தது.
இதனால் லோக்சபாவில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications