இந்திய தொழிலாளர்களின் பணத்தை சுரண்டும் அமெரிக்கா: லோக்சபாவில் புகார்
டெல்லி:
அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்பும் போது அவர்கள் செலுத்திய சமூகபாதுகாப்பு பணத்தை திரும்பத்தராமல் அமெரிக்க அரசு மோசடி செய்வதாக நாடாளுமன்ற லோக்சபாவில்எம்.பிக்கள் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோஷினா கித்வாய் மற்றம் விஜய் தர்தா, நஜ்மா ஹெப்துல்லாஆகியோர் இது தொடர்பாக லோக் சபாவில் பேசுகையில்,அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமிருந்துகிட்டத்தட்ட 600 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணம் சமூக பாதுகாப்பு நிதி (நம்ம ஊர் சேம நலநிதியைப் போன்றது) என்ற பெயரில் பெறப்பட்டுள்ளதாக நாஸ்காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் இந்தியர்கள் தான் அதிகம். இவர்கள் நாடு திரும்பும் போது இந்தப் பணத்தை அமெரிக்க அரசு திரும்பத்தருவதில்லை. இதன் மூலம் இந்தியர்கள் பல லட்சம் பணத்தை இழக்க நேரிடுகிறது. இதுகுறித்து மத்திய அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அனந்த் சர்மா பதிலளிக்கையில்,அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக உறுப்பினர்கள்கூறியுள்ளனர். இந்தக் கவலையில் மத்திய அரசும் பங்கு கொள்கிறது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு மத்திய அரசு கொண்டு செல்லும். இந்திய தொழிலாளர்கள்செலுத்தும் சமூக பாதுகாப்பு நிதி பிரச்சினை குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு இந்திய அரசு கொண்டுசெல்லும்.
இந்திய மாணவர்கள் மற்றம் தொழிலாளர்கள் தொடர்பான அமெரிக்க அரசின் குடியேற்ற சீர்திருத்த சட்டமசோதா இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. எனவே அதனால் இந்திய மாணவர்கள் மற்றும்பணியாளர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று இப்போதே கவலை கொள்ளத் தேவையில்லை.
சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் மட்டுமே அதுகுறித்து நாம் விவாதிக்க முடியும். அமெரிக்காவில்பணியாற்றி வரும் இந்தியத் தொழிலாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக வரும் புகார்கள் குறித்துஅமெரிக்காவில் உள்ள தூதரக அலுவலகங்கள் உரிய முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அனந்த் சர்மா.












Click it and Unblock the Notifications