அன்புமணி பதவி தப்புமா? டெல்லி உயர்நீதிமன்றம் கெடு
டெல்லி:
அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக தலைவர் பதவியை மத்திய சுகாதாரஅமைச்சர் அன்புமணி வகிக்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசு இன்னும் 2வாரத்திற்குள் பதில் அளிக்காவிட்டால், தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணியைநீக்க வேண்டி வரும் என டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசை எச்சரித்துள்ளது.
அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக தலைவர் பதவியில் அன்புமணி நீடிப்பதுபொருத்தமானதல்ல, அவரை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றுகோரி விஞ்ஞானக் கழக டாக்டர்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளனர்.இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்குஉத்தரவிட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இந்தமனு நீதிபதி அனில் குமார் முன்னிலையில் விசாரணைக்குவந்தது. அப்போதும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால்நீதிபதி கோபமடைந்தார்.
செப்டம்பர் 27ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைக்குள் மத்திய அரசுபதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறைசெயலாளர் இருவரும் வகித்து வரும் பதவியிலிருந்து அகற்றப்படுவார்கள் எனஎச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications