14 வயது சிறுமியை மணந்த 75 வயது தாத்தா!
பூர்ணியா:
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் ஆகாதோலா கிராமத்தில் 14 வயது சிறுமியை 75வயதாகும் தாத்தா கல்யாணம் செய்து கொண்டதால் பீகாரில் பரபரபப்புஏற்பட்டுள்ளது.
ஆகாதோலா கிராமத்தைச் சேர்ந்தவர் அன்சர் அன்சாரி. இவர் ஒரு நாட்டு வைத்தியர்.கடந்த 20ம் தேதி ரூபினா என்ற14 வயது சிறுமியை அன்சாரி கல்யாணம்செய்துகொண்டார். இதனால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ரூபினாவின் தந்தை தில் முகம்மது, அன்சாரியிடம் பணம் கடனாகவாங்கியிருந்தாராம். அந்தப் பணத்தைத் திருப்பித்தர முடியாததால் தான் தனது மகளைஅன்சாரிக்கு கல்யாணம் செய்து வைத்து விடட்தாக கூறப்படுகிறது.ஆனால் இதை அன்சாரி மறுத்துள்ளார்.
ரூபினாவின் தந்தை மற்றும் தாயார் ஷாவாதி பேகம் ஆகியோரின் சம்மதத்துடன் தான்ரூபினாவை கல்யாணம் செய்து கொண்டேன். நான் அடிக்கடி ரூபினாவின் வீட்டுக்குப்போவேன். அப்போது சிலநேரங்களில் ரூபினா தனியாக இருப்பார்.
அப்பாது இருவரும் பேசுவோம். இதனால் எங்களுக்குள் காதல் (?) மலர்ந்தது.இதைத் தொடர்ந்து தில் முகம்மது தம்பதியிடம் நான் ரூபினாவை எனக்கு கல்யாணமசெய்து வைக்குமாறு கேட்டேன். அவர்களும ஒப்புக்கொண்டனர். அதன் பின்னரேநான் ரூபினாவை கல்யாணம் செய்துகொண்டேன் என்கிறார் அன்சாரி.
ரூபினாவும், அன்சாரி சொல்வதையே ஆமோதிக்கிறார். நான் விருப்பப்பட்டுத் தான்கல்யாணம் செய்து கொண்டேன் என்கிறார் அவர்.ஆனால் கொடுத்த கடனைத் திருப்பித் தராததால் தான் ரூபினாவை கட்டாயப்படுத்திஅன்சாரி மணந்து விட்டார் என்று ஒட்டு மொத்த கிராமும் கூறுகிறது.
அன்சாரியின் செயலை அறிந்த அவரது மனைவி மெஹருன்னிசாவுக்கு மாரடைப்புஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை தற்போது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, கல்யாணம் குறித்துதெரியவந்தது. ஆனால் புகார் இல்லாமல் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாககூறுகிறது காவல்துறை.












Click it and Unblock the Notifications