இட ஒதுக்கீடு: கருணாநிதி தலையிட வீரமணி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவைநாடாளுமன்றத்தில் நறைவேற்ற முதல்வர் கருணாநிதி தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இடங்கள் அளிப்பது என்கிறபிரச்சனை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 21ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு கல்வி நிலையங்களில்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடம் அளிப்பதில் பொருளாதார அளவுகோல் இருக்காது என்று எடுக்கப்பட்டமுடிவுக்கு திராவிடர் கழகம் பாராட்டுதல்களை தெ>வித்துக் கொள்கிறது.

இப்போழுது மிக முக்கியமான அடுத்த கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறுந்து விடக்கூடாது.பிரதமருக்கு தக்க நேரத்தில் கடிதம் எழுதி அமைச்சரவையில் சரியான முடிவு எடுக்கப்படுவதற்கு முக்கியகாரணமாக இருந்த முதல்வர் கருணாநிதி அதன் தொடர்ச்சியாக இந்த நேரத்தில் ஆற்ற வேண்டிய மிகமிகமுக்கியமான கடமை ஒன்று இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் சட்டம் நறைவேற்றப்பட தம் செல்வாக்கை முதல்வர் பயன்படுத்த வேண்டும் என்று கோடானகோடி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக பிரதமரிடமும், காங்கிரஸ் தலைவர்சோனியாகாந்தியிடமும் தொடர்பு கொண்டு இதனை வலியுறுத்தது மாறு கோருகிறோம்.

தமிழகத்தை சேர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களும் காலதாமதம் செய்யாமல்நாடாளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதால், முழுவீச்சில் இறங்கிக் கடமையாற்று மாறும்கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+