தங்க வேட்டை நிகழ்ச்சியிலிருந்து விஜயலட்சுமி நீக்கம்!
சென்னை:
தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி உதயா டிவியில் நடத்திவந்த பங்கார வேட்டா (தங்க வேட்டை) நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.ராதிகாவின் ராடான் டிவி நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியநான்கு மொழிகளில் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிதான் தங்கவேட்டை. தமிழ் மற்றும்தெலுங்கில் நடிகை ரம்யா கிருஷ்ணனும், மலையாளத்தில் நடிகை ஊர்வசியும்,கன்னடத்தில் நடிகை விஜயலட்சுமியும் இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.
இந் நிலையில் நடிகை விஜயலட்சுமி திடீரென தற்கொலைக்கு முயன்றதால்,தங்கவேட்டை நிகழ்ச்சியிலிருந்து ராடன் நிறுவனம், விஜயலட்சுமிக்கு கல்தாகொடுத்து விட்டது.
அவருக்குப் பதில் கன்னட நடிகை தாராவை தொகுப்பாளராக நியமித்துள்ளனர்.இனிமேல் தாராதான் தங்க வேட்டை நிகழ்ச்சியை நடத்துவார் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு ரமேஷ் கொடுத்த காதல் தொல்லை குறித்து ராடன் டிவி நிறுவன ஓனர் நடிகைராதிகாவிடம் சென்று விஜயலட்சுமி புகார் செய்தபோது, அவரையே திருமணம் செய்துகொள்ளும்படி ராதிகா அட்வைஸ் தந்துள்ளார்.
இந்த விஷயத்தை போலீசாரிடம் தந்த வாக்குமூலத்தில் விஜய்லட்சுமி போட்டுஉடைத்துவிட்டதால் தான் அவருக்கு ராதிகா கல்தா தந்துள்ளதாகத் தெரிறது.
இந் நிலையில் விஜயலட்சுமி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தற்கொலைமுயற்சி வழக்கும், இயக்குநர் ரமேஷ் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கும்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜயலட்சுமியை டார்ச்சர் செய்ததாக கூறப்படும் ரமேஷ் தனது சென்னைஷூட்டிங்கை பாதியில் நிறுத்திவிட்டு அவசரமாக தனது சொந்த ஊரானபெங்களூருக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.
![]() |
இதையடுத்துஅவரை பெங்களூர் சென்று கைது செய்ய போலீஸ் படைவிரைந்துள்ளது.
விஜயலட்சுமியின் அக்காவைத்தான் நடிகை ஜெயப்பிரதாவின் தம்பி மணந்துள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமியின் அக்கா வரதட்சணை கொடுமைகாரணமாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தது நினைவிருக்கலாம்.
பெங்களூரைச் சேர்ந்தவராக இருந்தாலும் விஜயலட்சுமி தமிழ்க் குடும்பத்தைச்சேர்ந்தவர். காவிரிப் பிரச்சனையில் தமிழக திரையுலகினரோடு சேர்ந்துதமிழகத்துக்காக குரல் கொடுத்து பேரணியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை முயற்சி நாடகம்:
இந் நிலையில் விஜயலட்சுமியின் தற்கொலை முயற்சி குறித்து ராடன் டிவி நிறுவன நிர்வாகிஒருவர் கூறுகையில்,
ராடன் டிவி நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவம்சம் தொடர் மற்றும் தங்க வேட்டை கேம்ஷோ, இரண்டிலும் நடிகை விஜயலட்சுமி நடித்து வந்தார். சூர்ய வம்சம் தொடர் 310எபிசோடு ஒளிபரப்பாகி உள்ளது. இதில் கடந்த 1 ஆண்டுகளாக விஜயலட்சுமிஎங்களுடன் பணியாற்றி வந்தார்.
முதலில் அவர் நல்ல நடிகையாகத்தான் இருந்தார். எல்லாரிடமும் கலகலப்பாகபேசுவார். அப்படிப்பட்டவர் இன்று மாறி, மாறி பேசுவதை பார்த்தால்எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
எல்லோரிடமும் அவர் பேசுவதை யாருமே தவறாக நினைக்கவில்லை. ஆனால்அவை எல்லாம் அவரது மோசமான நடத்தைகளாக இருப்பது இப்போது தான்எங்களுக்கு புரிந்துள்ளது. அவர் ஒரு காதல் பைத்தியமாகவே இருந்துள்ளார்.
அவரை பற்றி எங்களால் நிறைய விஷயங்களை சொல்ல முடியும். ஆனால் ஒருபெண் என்பதால் அவர் வாழ்க்கை நாசமாகி விடக்கூடாதே என்ற எண்ணத்தில்இரக்கப்பட்டு சொல்ல மனம் வரவில்லை. என்றாலும் விஜயலட்சுமி கடந்த 1ஆண்டுகளில் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறார் என்பதை சொல்கிறேன்.
விஜயலட்சுமி வித்தியாசமான குணம் கொண்டவர். படப்பிடிப்பில் பார்க்கும்ஆண்களை எல்லாம் காதலிக்க வேண்டும். கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்என்று ஆசைப்படுவார். கொஞ்சம் பேசி விட்டால் ஐ லவ் யூ சொல்லி விடுவார்.அப்படிப்பட்ட ரகம் அவர்.
இதுவரை எங்களுக்கு தெரிந்து அவர் 4 பேரை காதலிப்பதாக சொல்லி தன் ஆசையைவெளிப்படுத்தியுள்ளார். டைர்கடர்கள் ராஜா (சூர்யவம்சம்) ரமேஷ் (தங்கவேட்டை)மற்றும் எங்கள் புரொடக்ஷன் மானேஜர்கள் 2 பேரிடம் அவர் ஐ லவ் யூ என்றுசொல்லி இருக்கிறார்.
![]() |
டைரக்டர்கள் ராஜா, ரமேஷ் இருவரும் விஜயலட்சுமி காதலை ஏற்கவில்லை.ஒதுங்கிப் போனார்கள். ஆனால் விஜயலட்சுமி விடாமல் அவர்களை விரட்டி, விரட்டிடார்ச்சர் செய்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தியுள்ளார்.
டைரக்டர் ராமேஷ் டார்ச்சர் செய்ததாக போலீசாரிடம் விஜயலட்சுமி கூறியுள்ளார்.ஆனால் உண்மையில் இவர்தான் டார்ச்சர் கொடுத்தார். ஒருவரிடம் தன் காதல்எடுபடாவிட்டால் அவரை கழற்றி விட்டு விட்டு அடுத்தவர் பக்கம் தாவி விடுவார்.
சூர்யவம்சம் டைரக்டர் ராஜாவை காதலிப்பதாக உருகி, உருகி எஸ்எம்எஸ்அனுப்பினார். எல்லாம் காதல் எஸ்எம்எஸ். அந்த எஸ்எம்எஸ் எல்லாம் இன்றும்எங்களிடம் ஆதாரங்களாகவுள்ளன. விஜயலட்சுமி அனுப்பிய காதல்எஸ்எம்எஸ்களை டைரக்டர் ராஜா பொருட்படுத்தவே இல்லை.
அதன் பிறகுதான் அவரை காதலிப்பதாக டார்ச்சர் செய்வதை நிறுத்தினார். இப்படி 3பேரை காதலித்து ஏமாற்றியுள்ளார். தங்கவேட்டை முதல் தடவை சூட்டிங்கின் போதேஇவர் ரமேஷிடம் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் டைரக்டர் ரமேஷ்அதை கண்டு கொள்ளவில்லை.
2வது கட்ட தங்கவேட்டை சூட்டிங்கின் போதும் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். பிறகு ஒரு நாள் இரவு ரமேசுக்கு போன்செய்து தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் கூறி இருக்கிறார். இதை எல்லாம்ஏன் என்னிடம் சொல்கிறாய் என்று ரமேஷ் கேட்டதற்கு, இனிமேல் எனக்கு எல்லாமேநீங்கள் தானே என்றார்.
இதை கேட்டு பதறிப்போன ரமேஷ் விஜயலட்சுமியிடம் பேசுவதையே தவிர்த்துஇருக்கிறார். 10 நாட்களுக்கு முன்பு திடீரென அவர், ரமேஷிடம் உங்களைகாதலிபபதாக நான் தான் முதலில் கூறினேன். இப்போது நானே என் காதலைதுண்டித்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
அதன் பிறகே அவர் டைரக்டர் ரமேஷிடம் அடிக்கடி மோதி இருக்கிறார்.விஜயலட்சுமிக்கும் ரமேசுக்கும் செட்டில் சண்டை வந்த தினத்தன்று நானும் அங்குதான்இருந்தேன். ரமேஷ் அவரை லட்சுமி என்று அழைப்பது வழக்கம். லட்சுமி என்று முன்அழைத்த போதெல்லாம் அவர் சிரித்து சிரித்து பேசியதை நானே பார்த்துஇருக்கிறேன்.
லட்சுமி என்று பெயர் சொல்லி அழைப்பதை விரும்பாவிட்டால் அவர் அன்றே தடுத்துஇருப்பார். அப்படி எதுவும் செய்யவில்லை. லட்சுமி என்று அழைப்பது கெளரவகுறைச்சலாக இருந்தால் நடிகை முகம் மாறி இருக்கும். ஆனால் ஒரு தடவை கூடவிஜயலட்சுமி முகம் மாறியதில்லை.
மாறாக அவர் லட்சுமி என்று அழைத்ததும் சிரித்துக்கொண்டே பதில் சொல்வார்.இதற்கொல்லாம் எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. சம்பவத்தன்று லட்சுமி என்றுரமேஷ் சொன்னதும் மேடம் என்று சொல்லும்படி கோபப்பட்டார். உடனேவெளியேறவும் செய்தார்.
நாங்கள் அவரை சமரசம் செய்து மீண்டும் தங்கவேட்டை சூட்டிங்கில் பங்கேற்கசெய்தோம். அவரும் சம்மதித்து இரவு நீண்ட நேரம் சூட்டிங்கில் கலந்து கொண்டார்.பிறகு வீட்டுக்கு புறப்பட்டு போகும் போது சாதாரணமாகத்தான் சென்றார். திடீரெனஇப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.
வரிசையாக தன் காதல் தோல்வி அடைந்ததால் அவருக்குள் விரக்தி ஏற்பட்டுஇருக்கலாம். அல்லது தன் தனிப்பட்ட காதல்குட்டு அம்பலமாகி விட்டதே என்றுநினைத்து இருக்கலாம். இதையொட்டி அவர் தற்கொலை நாடகம் நடத்தி இருப்பதாகநாங்கள் சந்தேகிக்கிறோம்.
டைரக்டர் ரமேஷ் கன்னடத்தில் சிறந்த எழுத்தாளர். நல்ல நடிகரும் கூட. அழகாகஇருப்பார். அவரை எப்போதும் ரமேஷ்ஜி என்று தான் விஜயலட்சுமி அழைப்பார்.தனக்கு ரமேஷ் கிடைக்காத கோபத்தில் நடக்காததை எல்லாம் அவர் சொல்லியுள்ளார்.ரமேஷை அவர் சுற்றி சுற்றி வந்து சிரித்து பேசியது படப்பிடிப்பு குழுவில் உள்ளஎல்லாருக்கும் தெரியும்.
ரமேஷிடம் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதற்கு எங்களிடம் ஆடியோஆதாரங்கள் இருக்கிறது. உருகி, உருகி அவர் பேசிய காதல் வசனங்கல் பதிவுஎங்களிடம் இருக்கிறது.
படப்பிடிப்பின் போது ரமேஷ் டார்ச்சர் செய்ததாக விஜயலட்சுமி கூறி இருக்கிறார்.படப்பிடிப்புக்கு விஜயலட்சுமி ஒரு நாள் கூட தனியாக வந்தது இல்லை. அம்மா,அக்கா ஆகிய இருவருடன்தான் வருவார்.
மேக்கப் அறையில் இவர்கள் 3 பேரும் தான் இருப்பார்கள். யாரும் விஜயலட்சுமிஅறை பக்கமே போனதில்லை. அப்படிப்பட்டவர் எப்படி டார்ச்சர் செய்தார் என்றுசொல்ல முடியும். ஒரு தடவை ராதிகாவிடம் உங்கள் தம்பிதான் (ரவிராஜா) ஆல் இன்ஆல். அவரை எனக்கு திருமண் செய்து வையுங்கள் என்று கூசாமல் நேருக்கு நேர்கேட்டார்.
இதைக் கேட்டதும் ராதிகா அதிர்ச்சி அடைந்து விட்டார். என் தம்பி திருமணமானவர்.அவருக்கு 7 வயதில் மகள் இருக்கிறார் என்று அறிவுரை கூறினார். அதோடு நீ நல்லஅழகான நடிகை உனக்கு நல்ல கணவர் கிடைப்பார் என்று கூறி வாழ்த்தினார்.
ஆனால் இன்று அந்த தகவல்கள் வேறு மாதிரி கதை கட்டப்படுகிறது. பார்க்கும்எல்லாரையும் காதலிக்க நினைக்கும் விஜயலட்சுமி எங்கள் நிறுவனம் மூலம் மாதம்ரூ. 3 லட்சம் சம்பாதித்தார். ஆனால் இன்று தடம் மாறி பேசுகிறார். எனவே தான்அவரை எங்கள் நிறுவனத்தின் எல்லா தயாரிப்புகளில் இருந்தும் நீக்கி விட்டோம்.
அவருக்கு பதில் நடிகை தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தாரா நடத்தும் தங்கவேட்டை சூட்டிங் நாளை தொடங்குகிறது. சூர்யவம்சம் தொடரில் இருந்தும்விஜயலட்சுமியை நீக்கி விட்டோம். அதில் நடிக்க ஒருவரைதேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்.














Click it and Unblock the Notifications