நத்தம் விஸ்வநாதன் வீடுகளில் ரூ. 48 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
சென்னை:
முன்னாள் அதிக அமைச்சர் நத்தம் விசுவநாதன் மற்றும் அவரது நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில்நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெ>வித்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விசுவநாதன். இவரது வீடுமற்றும் இவரது நண்பர்கள் வீடுகளில் வருமான வரிசோதனை நடத்த வருமான வரித்துறையின் மதுரை சரகஇயக்குநர் முத்துராமகிருஷ்ணன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம், தமிழகம் முழுவதும் 24இடங்களில் சோதனை நடைபெற்றது.இதில் விசுவநாதனின் வீடு, அவரது சகோதர் ஜெயராம் மற்ரும் விசுவநாதனின் நண்பர்களின் வீடுகள் அடங்கும்.இதுதவிர மதுரை, திண்டுக்கலில் உள்ள விசுவநாதன் மற்றும் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான சினிமாதியோட்டர்கள், பெட்ரோல் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், ஹோட்டல்கள்மற்றும் போக்குவரத்து நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது.
சென்னையில் தி.நகர் நியூ கிரி சாலையில் நத்தம் விசுவநாதனுக்கு சொந்தமான அடுக்கு மாடிக் குடியிருப்பிலும்சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் மொத்தம் 200 வருமான வரித்துறையினர் சோதனையில்ஈடுபட்டார்கள்.
சோதனையில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுக்கு உரிய கணக்கு இல்லாமல் இருந்தது தெரியவந்தது.மொத்தம் 24 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான தங்க நகைகள் மற்றும் ஆவணங்களைவருமானவ>த் துறையினர் பறிமுதல் செய்தார்கள். ரொக்கப் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
சோதனையில் சிக்கிய பொருட்களை மதிப்பிடும் பணி நடைபெற்றது. இதில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் உள்பட ரூ.1 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதை வருமானவரித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications