திமுகவுக்கு எதிராக தெருமுனை பிரச்சாரம்: ஜெ
சென்னை:
திமுக அரசின் தோல்விகள் குறித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த அதிமுகவினருக்கு முன்னாள்முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக அரசின் பொய்யான வாக்குறுதிகளால் பொய்யான திட்ட அறிவிப்புகளால் மக்களின் வாழ்க்கை கானல்நீராகிவிட்டது.
போதுமான நிதியின்றி பொழுதுக்கொரு திட்டம் என்ற பெயரால் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவது நியாயம்தானா? என்று சட்டசபையில் கேள்வி கேட்போரை திசை திருப்பிவிடும் பேச்சுக்கள், அவையை விட்டுவெளியேற்றுவது போன்றவை தான் திமுக அரசின் 100 நாள் சாதனைகள்.
இந்த அரசின் அறிவிப்புகள் கனவில் கிடைத்த பணத்தைப் போல ஆகிவிட்டது. நிஜத்தில் நிறைவேற்ற முடியாதுஎன்று தெரிந்தே மக்களை ஏமாற்றிடும் இந்த அரசின் முறைகேடுகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சொல்லவேண்டும்.
வங்கிக் கடன் ரத்து என்று கோப்பில் கையெழுத்திட்டுவிட்டு நபார்டு வங்கிக்கும் கூட்டுறவு வங்கிக்கும் பணத்தைசெலுத்தாதால் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.
தொலைக்காட்டி பெட்டி இல்லாத அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்படும் என்று பட்டிதொட்டியெங்கும்கூறிவிட்டு இப்போது 30,000 பேருக்கு மட்டும் தரப்படும் என்று கருணாநிதி கூறுகிறார்.
தமிவகத்தில் விறகு, மண்ணெண்ணை அடுப்புகளை ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள்பயன்படுத்துகின்றன. அவர்கள் அனைவருக்கும் இலவச கேஸ் ஸ்டவ், சிலிண்டெர் இணைப்பு எனஅறிவித்துவிட்டு அதற்கு மிகக் குறைவான தொகையையே ஒதுக்கியுள்ளனர்.
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் நிதியுதவி என்று அறிவித்துவிட்டு இப்போது அதற்கு நிறையகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் என்று கூறி, முதலில் 5 லட்சம் பேருக்கு என்றும் பின்னர் கையளவு நிலம் என்றும்கடைசியில் எத்தனை பேருக்கு என்று சொல்ல முடியாது என்றும் முன்னுக்குப் பின் முரணாக அரசால்சொல்லப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால் நித்தம், நித்தம் கொலைகள், கொள்ளைகள், ரேசன் அரிசி கடத்தல் நடந்துவருகிறது.
இதைப் பற்றி வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் 20ம் தேதி வரை அதிமுக சார்பில் நடக்கும் தெருமுனைபிரச்சாரக் கூட்டங்களில் எடுத்துரைக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications