தமிழக அரசு-என்எல்சி அதிகாரிகள் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுரங்கத் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகிகளுக்குதமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் விவாததில் கலந்து கொண்டு பேசிய பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசியதாவது,என்எல்சி ஊழியர்களின் நிலை அறிந்து 10 சதவீத என்எல்சியின் பங்கு விற்பனையை தடுத்து நிறுத்திய தமிழகமுதல்வர் கருணாநிதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுரங்க தொழிலாளர்களின் கோரிக்கையின் படி அவர்கர்களின் வேலை உறுதி, பாதுகாப்பு, சலுகைகள் குறித்துஎன்எல்சி நிர்வாகிகள் அக்கறையின்றி இருக்கிறார்கள். மேலும் சுரங்க தொழிலாளர்கள் பிரச்சனை குறித்துபேச்சுவார்த்தைக்கும் முன் வர மறுக்கிறார்கள் என்றார்.
இதற்கு பதில் அளித்த கருணாநிதி, இதுகுறித்து பேச்சுவார்த்தைக்கு என்எல்சி நிர்வாகிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications