நான் யார் பின்னாலும் போக மாட்டேன்: விஜயகாந்த்
விருத்தாச்சலம்:
நான் யார் பின்னாலும் போக மாட்டேன். என் பின்னால் வர விரும்புபவர்கள் தாராளமாக தேமுதிகவில் சேர்ந்துவரலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளர்.
கடந்த பல ஆண்டுகளாகவே தனது பிறந்த நாளை கொண்டாட விஜயகாந்த் நேற்று தனது 55வது பிறந்த நாளைவிருத்தாச்சலத்தில் தொகுதி மக்கள் மத்தியில் கொண்டாடினார்.இதற்காக சென்னையிலிருந்து மனைவி பிரேமலதா, 2 மகன்களுடன் விருத்தாச்சலம் வந்த விஜயகாந்த்,அங்குள்ள கல்யாண மண்டபத்தில் வைத்து தனது தொகுதி மக்களின் வாழ்த்துதக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், 100 நாட்களை கடந்து விட்டது திமுக அரசு. பலநலத்திட்டங்களை அறிவித்து வருகின்றனர். சட்டமன்றம் நடைபெறும் விதம் திருப்திகரமாக இல்லை.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பேசுவதற்கே நேரம் ஆகி விடுகிறது. மற்ற கட்சியினருக்கு போதுமான நேரம்கிடைப்பதில்லை.
வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம். யாருடனும் கூட்டணி கிடையாது. நான் யார்பின்னாலும் போக மாட்டேன். என் பின்னால் வர விரும்புவோர் தாராளமாக கட்சியில் சேர்ந்து வரலாம்.
தேமுதிகவில் 1 கோடி பேர் உறுப்பினரகளாக உள்ளநர். இவர்களுக்கு விரைவில் உறுப்பினர் அட்டைகொடுக்கப்படவுள்ளது.
ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் சேர்ந்து விட்டதாக கூறப்படுவது தவறு. அப்படி யாரும் சேரவில்லை.
இலங்கை பிரச்சினை குறித்து ஆளாளுக்கு எழுதுகிறார்கள். பேசுகிறாரக்ள். உண்மை என்ன என்பதை அங்கேபோய் பார்த்தால் தான் தெரியும். இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு பரிவும், பாசம் நிறையவே உண்டு.அவர்களுக்காகத் தான் நான் பிறந்த நாளே கொண்டாடமல் இருந்து வந்தேன்.
இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications