விநாயகர் சதுர்த்தி-தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாளை வினாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. வினாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு கடுமையானகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நாளை வினாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நாடுமுழுவதுமே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் அனைத்து முக்கிய ஊர்களிலும் வினாயகர்சிலைகள் வைக்கப்பட்டு 10 நிாட்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

சாலையோரங்கள், தெருக்களில் வைக்கப்படும் சிலைகளுக்க போலீஸ் பாதுகாப்புஅளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வினாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பாகிஸ்தான்ஆதரவு தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறைஎச்சரித்துள்ளதாஸ் நாடு முழுதும் கண்காணிப்பு பலப்படுத்தபப்ட்டுள்ளது.

மேலும் வினாயகர் சிலை ஊர்வலங்களிலும் விஷமிகள் ஊடுறுவலாம் எனஉளவுத்துறை எச்சரித்துள்ளதால், உச்ச கட்ட பாதுகாப்பு கொடுக்கப்படவுள்ளது.

முக்கிய நகரங்களில் வாகன சோதனைகளும், சோதனைச் சாவடிகள் மூலமும் தீவிரகண்மகாணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவு நேர வாகனசோதனையும்கு தீவிரப்டுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் 5001 வினாயகர் சிலைகளை வைக்க இந்து முன்னணிஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர இந்து மக்கள் கட்சி, சிவசேனா சார்பிலும் சிலைகள்வைக்கப்படுகின்றன. மொத்தம் 10,000 சிலைகள் வரை சென்னையில்வைக்கப்படுகின்றன.

ஒவ்வாரு சிலைக்கும் ஷிப்ட் முறையில் 2 போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர். 24 மணி நேரமும் இவர்கள் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படுவர்.

வினாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு ஏற்கனவேபோலீஸார் பல கட்டுப்பாடுகளைஅறிவித்துள்ளனர்.

சிறப்பு ரயிலகள்:

இதற்கிடையே, வினாயகர் சதுருத்தியையொட்டி சென்னையிலிருந்து மதுரை மற்றும்திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன.

திருச்சியிலிருந்து இன்று இரவு 9மணிக்கு சிறப்பு ரயில் கிளம்பி நாளை காலை 4மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மறுமார்க்கத்தில் நாளை மறுதினம் இரவு11.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருச்சிசெனறடயும்.

அதே போல மதுரையிலிருந்து இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்நாளை காலை9 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறு மார்க்கத்தில் நாளை இரவு 11மணிக்குப் புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 9 மணிக்கு மதுரையை அடையும்.இந்த ரயில்களுக்கானமுன்பதிவு தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+