கோலாலம்பூர்-பாரிஸ் விமானத்தில் பயணிக்குநெஞ்சு வலி-சென்னையில் அவசரமாய் தரையிறக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரிஸ் சென்று கொண்டிருந்த மலேசிய விமானத்தில் பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அந்த விமானம்அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குசென்னைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது 58 வயது பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.இதையடுத்து சென்னையில் தரையிறக்க விமானி அவசரமாக அனுமதி கேட்டார். உடனடியாக அனுமதிதரப்பட்டதையடுத்து அந்த விமானம் மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தாயாராக வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அந்தப் பயணி அப்பல்லோ மருத்துமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். உடன் அவரது மனைவியும் தரையிறங்கவும் மருத்துவமனைக்குச் செல்லவும்அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அதிகாலை 3.3. மணிக்கு அந்த விமானம் பாரிஸ் கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications