27% இட ஒதுக்கீடு: இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி
தர்மபுரி:
உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின்மசோதா இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு முழு திருப்தி அளிக்கவில்லை என அக் கட்சியின் மாநிலச் செயலாளர்தா.பாண்டியன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,ஒசூர் அருகே சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதுவரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பொருளாதார மண்டலம் அமைக்க 3,000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம்இரந்து கையப்படுத்தும் முயற்சி நடக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
இதை தமிழக அரசு கைவிட்டு, அரசின் தரிசு நிலங்களை கையப்படுத்தி பொருளாதார மண்டலங்களைஅமைக்கலாம்.
உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின்மசோதா இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு முழு திருப்தி அளிக்கவில்லை.
ராணுவம்-புலிகள் மோதலால் அப்பாவித் தமிழர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே இரு தரப்பினரும்ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்ததையை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications