1,200 ஆண்டு பழைய திருவிடைமருதூர் கோவிலில் கும்பாபிஷேகம்
கும்பகோணம்:
திருவிடைமருதூரில் உள்ள 1,200 ஆண்டு பழமை வாய்ந்த ஜோதி மகாலிங்கேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 36ஆண்டுகளுக்குப் பின் இன்று மிக விமரிசையாக நடந்தது.
கும்பகோணம் அருகே அமைந்துள்ள இந்த ஸ்ரீ பிகரத்சுந்தர குஜம்பாள் சமேத ஜோதி மகாலிங்கேஸ்லர கோவில்சைவத் திருக் கோவில்களில் மிகப் பழமையானதாகும்.நாட்டின் பல்வேறு புனித ஆறுகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு 4 ராஜ கோபுரங்களின் கலசங்கள்மீதும், 3 உட்புற கோபுரங்கள் மீதும் தெளிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத 9.20 மணிக்குகும்பாபிஷேகம் நடந்தது.
இந் நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாடுதுறை ஆதின மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் ரூ. 3.5 கோடி செலவில்புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கோவிலில் உள்ள 100 ஆண்டு பழைய நூலகத்தில் சுவடிகளில் உள்ள சமஸ்கிருத இலக்கியங்களை பாதுகாக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதி சங்கரருக்கு அத்வைத சித்தாந்தின் மீது பற்றுதல் உண்டானது இந்தக் கோவிலில் தான் என்றுகருதப்படுகிறது.