விஜயலட்சுமி வழக்கு: இயக்குநருக்கு முன் ஜாமீன்
சென்னை:
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் தங்க வேட்டை இயக்குநர் ரமேஷுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் நிபந்தனைமுன்ஜாமீன் வழங்கியுள்ளது.
நடிகை ராதிகாவின் ரேடான் நிறுவனம் தயாரிக்கும் தங்க வேட்டை நிகழ்ச்சியின் கன்னடப் பதிப்பான பங்காரகவேட்டா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றார்.தனது தற்கொலைமுடிவுக்கு இயக்குநர் ரமேஷ் தான் காரணம் என போலீஸில் விஜயலட்சுமி கொடுத்துள்ளவாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து ரமேஷ் மீது பாலியல் சித்திரவதை மற்றும் தற்கொலைக்குதூண்டியதாகவும், விஜயலட்சுமி மீது தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீஸார் வழக்கிப்பதிவு செய்தனர்.
ரமேஷைக் கைது செய்ய அவரைத் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ்முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கே.என்.பாட்ஷா விசாரித்தார். மறு உத்தரவுவரும் வரை கோவையில் தங்கியிருக்க வேண்டும.
அங்குள்ள ரேஸ் கோர்ஸ் சாலை காவல்நிலையத்தில் தினசரி காலை10.30மணிக்கு கையெழுத்திட வேண்டும்என்ற நிபந்தைனயுடன் ரமேஷுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிடடார்.












Click it and Unblock the Notifications