குடிப்பதை தட்டிக் கேட்ட மகளை எரித்துக் கொன்ற தந்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடிப்பழக்கத்தையும், தாயைக் கண்டிப்பதையும் நிறுத்தக் கூடாதா என்று தட்டிக் கேட்ட மகளை தீ வைத்துஎரித்துக் கொன்றார் தந்தை.

சென்னை கண்ணதாசன் நகர் 8வது பிளாக்கைச் சேர்ந்தவர் சேகர். 60 வயதாகும் சேகர் மத்திய அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலா. இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுபடுத்த படுக்கையாகஇருக்கிறார்.

இவர்களது மகள் பவித்ரா (14) 7 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தாய்க்கு உதவியாக இருக்க வேண்டும்என்பதற்காக அதற்கு மேல் படிக்கவில்லை.சேகர் குடிப்பழக்கம் உடையவர். தினசரி குடிப்பார். குடிக்க பணம் கேட்டு கலாவை துன்புறுத்துவாராம்.மகளையும் அவர் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார்.

நேற்றும் வழக்கம் போல கலாவிடம் தகராறு செய்துள்ளார். இதைப்பார்த்து வேதனை அடைந்த பவித்ரா, இப்படிதினசரி அம்மாவைப் போட்டு கொடுமைப்படுத்துகிறீர்களே, குடிப்பழக்கத்தை தொலைத்தால் தான் என்ன என்றுகோபமாக கேட்டுள்ளார்.இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சேகர், ஆத்திரம் கண்ணை மறைக்க, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்துபவித்ரா மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடினார்.

உடல்முழுவதும் எரிந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பவித்ரா இன்று காலைபரிதாபமாக உயிரிழந்தார்.தப்பி ஓடிய சேகரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+