தாயகத்தில் பிரிவு ... தமிழ் மண்ணில் சந்திப்பு!
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
இலங்கையில் பிரிந்த கணவரும், மனைவியும் எட்டயபுரம் அகதிகள் முகாமில் 15ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்று சேர்ந்தனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் சுப்பம்மாள் (65). இவர் தனது கணவர் ராஜு (80) மற்றும்குழந்தைகளை பிரிந்து கடந்த 1990ம் ஆண்டு அகதியாக ராமேஸ்வரம் வந்தார்.பின்னர் விளாத்திகுளம் அருகே குளத்து வாய்ப்பட்டி அகதிகள் முகாமில் தங்கினார்.இந்த நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை இலங்கையிலிருந்து 378 அகதிகள்எட்டயபுரம் தாப்பாத்தி அகதிகள் முகாமுக்கு வந்தனர். அவர்களில் சுப்பம்மாளின்கணவர் ராஜுவும் இருந்தார்.
ராஜு தாப்பாத்திமுகாமுக்கு வந்துள்ளது குறித்து சுப்பம்மாளின் மகன் தனது தாய்க்குதகவல் கொடுத்தார். இதையடுத்து தாப்பாத்தி முகாமுக்கு வந்த சுப்பம்மாள் தனதுகணவரை கிட்டத்தட்ட 15 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் சந்தித்து சந்தோஷமடைந்தார்.
தாயகத்தில் தனது கணவரைப் பிரிந்த சுப்பம்மாளுக்கு தமிழ் மண்ணில் அவரைமீண்டும் சந்தித்து பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அவர் மட்டுமல்லாதுமுகாமில் தங்கியுள்ள மற்ற அகதிகளும் இந்தத் தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications