விநாயகர் சிலை கரைப்பு: மீன்கள் தாக்கி 50 பேர் காயம்!
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில் விநாயகர் சிலைகளை கரைத்த போது திருக்கை மீன்கள் தாக்கியதில் 50 பேர்காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடந்தன.ஊர்வலத்தின இறுதியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடலில் சிலைகள்கரைக்கப்பட்டன.தேவனாம் பட்டனம் கடல்பகுதியிலும் ஏராளமான விநாயகர் சிலைகள் கடலில்கரைக்கப்பட்டன. கடலுக்குள் சிலைகளுடன் சென்றவர்கள் திடீரென அலறினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பலர் கடலிலிருந்து ஓடி வந்து கடற்கரையில் விழுந்து துடித்தனர். பலர்மயக்கமடைந்தனர். அவர்களது காலிலிருந்து ரத்தம் கொட்டியது. கடலில் ஏதோதங்களைக் கடித்ததாக துடித்தவர்கள் கூறினர்.
கடலில் உள்ள திருக்கை மீன்கள் தான் அவர்களை கடித்திருக்க வேண்டும் என்றுமீனவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வண்டிகளில் ஏற்றப்பட்டுமருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அரசு மருத்துவமனையில்அவர்களுக்கு கட்டு போட்டு மருந்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications