சட்டசபையை கலக்கிய கழுதை!
சென்னை:
கழுதை என்ற வார்த்தையை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் பயன்படுத்தியதால்சட்டசபையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார் பேசுகையில்,அதிமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்றுசபையில் இடம் பெறக் கூடாத வார்த்தையை சொல்லி முன்னாள் முதல்வர்ஜெயலலிதா விமர்சித்தார்.
நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, கழுதை என்பது உழைக்கிற பிராணிதான்.எனவே அந்த வார்த்தையை நீக்கத் தேவையில்லை என்று ஜெயலலிதா கூறினார்என்றார் ஜெயக்குமார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஒரு வார்த்தையை அவர்பிரயோகித்துப் பேசினார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துகோஷம் போட்டனர்.
சபாநாயகர் இருக்கைக்கு முன் வந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு குரல்எழுப்பினர். அப்போது எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம்பேசுகையில்,
முன்னாள் முதல்வரை, எதிர்க்கட்சித் தலைவரை இவ்வாறு கூறுவது தவறாகும். இதைஅவைக் குறிப்பிலிருந்து நீக்க வண்டும் என்றார்.
அப்போது சபையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி,கழுதை என்ற வார்த்தை ஏற்கனவே அவைக்குறிப்பில் உள்ளது. எனவே நீக்கமுடியாது என்றார்.
அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன் தனது இருக்கைக்கு வந்தார்.
அப்போது நிதியமைச்சர் அன்பழகன் எழுந்து, முன்னாள் முதலமைச்சரைகழுதையுடன் ஒப்பிட்டு பேசியதுபோல இருந்தால் அதை அவைக் குறிப்பிலிருந்துநீக்கி விடவும் என்று சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.
பின்னர் முதல்வர் கருணாநிதி எழுந்து, அவை முன்னவர் அன்பழகன் கூறியதைநானும் வழி மொழிகிறேன். கழுதை என்ற வார்த்தை இடம் பெறக் கூடாது என்றுகடந்த சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டபோது, அன்றைய சபாநாயகர்அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.
ஆனால் அன்றைய முதலமைச்சர் அம்மா எழுந்து, கழுதை என்பது உழைக்கும்சின்னம்தான். எனவே அவைக் குறிப்பிலிருந்து நீக்கத் தேவையில்லை என்றார்.அதையடுத்து சபாநாயகராக இருந்த காளிமுத்துவும், ஆமாம், ஆமாம், கழுதை என்பதுஉழைக்கும் சின்னம்தான். அவைக்குறிப்பில் இடம் பெறலாம் என்றார்.
இப்போது உறுப்பினர் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விடலாம்.இப்போதைக்கு அந்தக் கழுதையை விரட்டி விடலாம் என்றார்.
இதையடுத்து ஜெயக்குமார் கூறிய வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிசபாநாயகர் உத்தரவிட்டார்.