3ம் தேதி சென்னை வருகிறார் அப்துல்கலாம்
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகிற 3ம் தேதி சென்னைக்கு வருகிறார்.முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருது வழங்கும் விழா உள்ளிட்டநிகழச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
3ம் தேதி இரவு 9.40 மணிக்கு அப்துல் கலாம் சென்னை வருகிறார். அடுத்த நாள்காலை 9 மணிக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழாவைதொடங்கி வைக்கிறார்.அடுத்து பகல் 12.30 மணிக்கு வேலூர் மாவட்டம் ஆம்பூர் செல்லும் கலாம், சூலூர்கிராமத்தில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில்பங்கேற்கிறார்.
பின்னர் சென்னை திரும்பும் கலாம் மாலையில் இந்தியன் வங்கியின் நூற்றாண்டுநிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தமிழ்நாடுமீடியேஷன் மற்றும் கன்சலேஷன் மையத்தின் முதலாவது ஆண்டு விழாவில்பங்கேற்கிறார்.
மாலை 6.10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் தொல்காப்பியர் விருதுவழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, முதல்வர் கருணாநிதிக்கு விருதினைவழங்குகிறார்.
இரவு 7.35 மணிக்கு தரமணியில் உள்ள தேசிய விவசாய பவுண்டேஷன் ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு மையத்தினை பார்வையிட்டு விவசாயிகளுடன் உரையாடுகிறார்.
இரவு 9.30 மணிக்கு தனது சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லிதிரும்புகிறார்.
கலாம் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications