சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை:
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தப்படுகிறது.
இதுகுறித்து சட்டசபையில் முதல்வர் கருணாநிதி 110வது விதியின் கீழ் இன்று ஒரு அறிக்கை படித்தார். அதன்விவரம்:சத்துணவு மையங்களிலும், அங்கன் வாடிகளிலும் பணியாற்றுவோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட சிலகோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள்,தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இயன்றவரையில் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இப்போது அரசு நிதியாதார பற்றாக்குறை இருந்த போதிலும் சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடிகளில்பணியாற்றுவோரின் கோரிக்கையின்படி தற்போது அவர்கள் பெற்று வரும் மாதம் ஊதியத்தில் ரூ. 260உயர்த்தப்படுகிறது.
சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையல்காரர்களுக்கும், அங்கன்வாடிகளில் பணியாற்றும் முதல் நிலைஅங்கன்வாடி உதவியாளர்களுக்கும் தற்போது அவர் பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக ரூ.120வழங்கப்படும்.
சமையல் உதவியாளர்களும், அங்கன்வாடிகளில் பணியாற்றும் இரண்டாம் நிலை உதவியாளர்களுக்கும் தற்போதுஅவர் பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக ரூ. 110 வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு இன்று முதல்நடைமுறைக்கு வரும்.
அதே போல 82,423 ஓய்வூதியதார்களுக்கும் ஊதியம் உயர்த்தப்படுகிறது. இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ. 350கோடி செலவாகும் என அவர் கூறியுள்ளார்.
எம்எல்ஏக்களுக்கு விருந்து:
இந் நிலையில் நாளையோடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைவதையொட்டி இன்றிரவு முதல்வர்அனைத்து எம்எல்ஏக்களுக்கும் விருந்து அளிக்கிறார்.
கிண்டி லீ மெரிடியண் ஹோட்டலில் இரவு இந்த விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அதிமுக, மதிமுக, விடுதலைசிறுத்தைகள் பங்கேற்பார்களா என்று தெரியவில்லை.