மிடாஸை மூட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு வேண்டியவர்கள் நடத்திவருவதாகக் கருதப்படும் மிடாஸ் மதுபான தொழிற்சாலையை மூட உத்தரவிட்டதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை அருகே படப்பையில் உள்ளது மிடாஸ் தொழிற்சாலை. இது சசிகலாவின்பினாமிகளால் நடத்தப்படும் ஆலை என திமுக புகார் கூறுகிறது. அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழகம்முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் ஒயின்ஷாப்களிக்கு இந்த ஆலையிலிருந்து மட்டும் தான் பெருமளவில் மதுபானம்வாங்கப்பட்டது.அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில், மிடாஸ் ஆலையில் வருமான வரி சோதனைநடத்தப்பட்டது. இந் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் மிடாஸ் மதுபானத்தொழிற்சாலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொழிற்சாலையின் இயக்குனர்களில் ஒருவரான ராகவன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது மனுவில், மிடாஸ் ஆலையில் மதுபானம் தயாரித்து வருகிறோம். இங்கிருந்துவெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்க ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் பிளான்ட்டை சரி வரஅமைக்கவில்லை என்றும், அனுமதித்த அளவை விட அதிகமாக உற்பத்திசெய்ததாகவும், மற்றும் சில விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டி தமிழகமாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
அதற்குப் பதில் அளிக்காத காரணத்தால் கடந்த ஜூலை 13ம் தேதி 2வது நோட்டீஸ்அனுப்பியது. அதன் பிறகு நாங்கள விரிவான பதில் அனுப்பினோம். அதன் பிறகுமாசுக் கடடுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அறிக்கைதயாரித்தனர்.
அதன் நகலை எங்களுக்குத் தரப்படவில்லை. இதையடுத்து கடந்த 24ம் தேதிஎஙகளது ஆலையை மூடுமாறு மாசுக் கடடுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதற்குதடை விதிக்க வேண்டும் என்று கோரினார் ராகவன்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர்அடங்கியபெஞச், மிடாஸ் ஆலையை மூட இடைக்கால தடை விதித்தனர். வழக்கு விசாரணைஅடுத்த மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைகுள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனுவைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications