மைனர் பெண்ணை கடத்திய மலேசிய கார்த்திகேசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த ஆண்டு கரீஷ்மா என்ற பெண் தொடர்பாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமலேசிய வாலிபர் கார்த்திகேசு, இப்போது மைனர் பெண்ணை கடத்தியதாக புதுசர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்தவர் கார்த்திகேசு மீது கடந்த ஆண்டு கரீஷ்மா என்ற பெண்போலீஸில் புகார் கொடுத்தார். 2 குழந்தைகளுக்குத் தாயான கரீஷ்மா மலேசியாவில்வீட்டு வேலைக்காக சென்றார்.

ஆனால் அங்கு விபச்சார விடுதியில் அவர் சேர்க்கப்பட்டர். விபச்சார அழகியைத்தேடி அங்கு போன கார்த்திகேசு, கரீஷ்மாவின் அழகில் மயங்கி அங்கிருந்து அவரைமீட்டார். பின்னர் திருமணம் செய்து கொளவதாக கரீஷ்மாவிடம உறுதியளித்தார்.இதையடுத்து இருவரும் சில காலம் கணவன், மனைவியாக வாழ்ந்தனர்.

இந் நிலையில் கரீஷ்மாவை கார்த்திகேசுவே மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தமுயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கரீஷ்மா அங்கிருந்து தப்பி சென்னைக்குவந்தார்.

கார்த்திகேசுவும் கரீஷ்மாவைத் தொடர்ந்து சென்னைககு வந்தார். கரீஷ்மா எனதுமனைவி அவரை மீட்காமல் மலேசியா போக மாட்டேன் என அவர் கூறினார்.

இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னைக் கடத்தமுயன்றதாக கரீஷ்மா, கார்த்திகேசு மீது புகார் காடுத்தார். போலீஸார் கார்ததிகேசுவைகைது செய்தனர்.

பினனர் இருவரும் சமரசமமாகி கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர்.இந்த நிலையில் கரீஷ்மாவை வெறுக்க ஆரம்பித்த கார்த்திகேசு, விதம் விதமானபெண்களுடன் ஜாலி பண்ண ஆரம்பித்துள்ளார்.

அழகான பெண்களை மயக்கி அவர்களை விபச்சாரத்திலும் ஈடுபடுத்தியதாகத்தெரிகிறது. இதுதொடர்பாக 6 மாதங்களுக்கு முன்பு 2 விபச்சாரப் பெண்களுடன்கார்த்திகேசு கைது செய்யப்பட்டார். 1 மாத சிறைத் தண்டனையையும அவர்அனுபவித்தார்.

சிறையிலிருந்து வெளியே வந்ததும் வண்ணர்ாரப்பட்ேடையில் எழுமலை என்பவரின்வீட்டில் வாடைகக் குடி பெயர்ந்தார். எழுமலைக்கு மொத்தம் 4 மகள்கள். இவர்களில்3வது மகளான ஜமுனா (13 வயது தான்) அழகாக இருப்பார்.

அவரது அழகு, கார்த்திகேசு கண்ணை உறுத்தியது. ஜமுனாவுக்கு குறி வைத்தார்.

கார்த்திகேசுவின் வலையில் ஜமுனாவும் விழுந்தார். அடிக்கடி கார்த்திகேசு வீட்டுக்குவந்து அவரிடம் பேச ஆரம்பித்தார். கரீஷ்மா இல்லாத நேரங்களில், ஜமுனாவிடம்ஆசை வார்த்தை கூறி ஜாலியாக இருக்க ஆரம்பித்தார் கார்த்திகேசு.

இது கரீஷ்மாவுக்கு தெரிய வரவே ஜமுனாவை கண்டித்துள்ளார்.கணவரையும்கண்டித்துள்ளார்.

இந் நிலையில் கடந்த 31ம் தேதி முதல் ஜமுனாவையும் கார்த்திகேசுவையும்காணவில்லை. பதறிப்போன எழுமலை போலீஸில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து இன்று காலை ஜமுனாவின் அக்காவை கார்த்திகேசு, தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மதுரையில் இன்று மாலை ஒருகோவிலில் வைத்து ஜமுனாவை கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக கார்த்திகேசு கூறியுள்ளார். ஜமுனாவும் தனது அக்காவிடம்பேசினார். பதட்டத்துடன் பேசிய அவர் உடனடியாக மதுரைக்கு புறப்பட்டு வருமாறுகூறியுள்ளார்.

இதையடுத்து வண்ணாரப்பேட்டடை போலீஸாரிடம் எழுமலை இந்தத் தகவலைதெரிவித்தார். வண்ணாரப்பேட்டை போலீஸார் மதுரை போலீஸாரை உஷார்படுத்திஇருவரையும் மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+