கருப்பு பட்டியலில் 49 பஹ்ரைன் நிறுவனங்கள்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
பஹ்ரைன் நாட்டில் உள்ள 49 நிறுவனங்களில் இந்தியர்கள் யாரும் வேலையில் சேரவேண்டாம் என பஹ்ரைனுக்கான இந்தியத் தூதர் பாலகிருஷ்ண ஷெட்டிஎச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பஹ்ரைனில் நாங்கள் குறிப்பிட்டுள்ள 49நிறுவனங்களில் அடிப்படை வசதிகள் சுத்தமாக இல்லை. சுகாதாரமற்ற சூழ்நிலையில்பணியாளர்களை தங்க வைப்பது,முறையாக ஊதியம் வழங்காதது, உடல் ரீதியாகதாக்குதல், பணியிடததில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் இருத்தல் ஆகியதவறுகளை இந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன.இந்த 49 நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளோம். இந்தநிறுவனங்கள்குறித்த பட்டியல் இந்திய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்குஅனுப்பி வைக்கப்படும்.
பஹ்ரைன் நிறுவனங்களில பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களை எச்சரிக்கஇந்த பட்டியல் பயன்படும் என்றார் ஷெட்டி.












Click it and Unblock the Notifications