கலாம் விமானத்தில் குண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த புரளியைத் தொடர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம்தாமதமாக அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நேற்று முன் தினம் இரவு விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் அவர்சென்னை வந்தார். தமிழகத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்றிரவு 11.15மணிக்கு அதே விமானம் மூலம் டெல்லி திரும்ப திட்டமிட்டிருந்தார்.இந் நிலையில விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது.அதில் பேசிய நபர், குடியரசுத் தலைவர் பயணம் செய்யவுள்ள விமானத்தில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டினார்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்திலிருந்துபார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
குடியரசுத் தலைவரின் தனி விமானம் முழுவதும் மோப்ப நாய்களுடன், வெடிகுண்டுநிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக அதிகாலை 2 மணிக்குத்தான்கலாம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications