ஜெ மீதான வருமான வரி வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கை 4 மாதங்களில்விசாரித்து முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றதிதற்கு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1993-94ம் ஆண்டுககான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாததுதொடர்பாக ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீது எழும்பூர்பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்குதொடுத்துள்ளது.இந்த வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில மனுசெய்தார் ஜெயலலிதா. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.இதையடுத்து ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடுசெய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.அகர்வால், நவ்லேகர் ஆகியோர்அடங்கிய பெஞ்ச்,
இந்த வழக்கு 11 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இவ்வழக்கை உடனடியாகவிசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்சம் 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் நகலை பேக்ஸ் மூலம் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்குஉடனடியாக அனுப்பி வைக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications