வந்தே மாதரம் கட்டாயமல்ல: தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாளை (செப்டம்பர் 7) தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும். அதே சமயம், இதை கட்டாயப்படுத்தக் கூடாது எனதமிழக அரசு அறிவித்துள்ளது.

வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டிஇந்தியா முழுவதும் செப்டம்பர் 7ம் தேதி பள்ளி, கல்லூரிகளில் இப்பாடலை பாடவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இதைகட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை நாளை பாடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காலை 11 மணிக்கு வந்தேமாதரம் பாடலை பாட வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய தேசிய லீக் தலைவர் முகம்மது சுலைமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வந்தே மாதரம் பாடலைப் பாடுவதிலிருந்துவிதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வந்தே மாதரம் பாடலை பள்ளிகளில் பாடச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் இதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்கள், கல்வி அலுவர்கள் , தொடக்கக் கல்வி அலுவலர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல கல்லூரிகளிலும் விருப்பப்பட்டால் இந்தப் பாடலை பாடலாம் என்றுகல்லூரிக் கல்வி இயக்குநர் மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+