பிணத்தை எடுத்துச் செல்ல லஞ்சம்: மருத்துவமனை ஊழியருக்கு தர்ம அடி!
சென்னை:
சென்னை அரசினர் ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை சவக் கிடங்குக்கு எடுத்துச் செல்லபணம் கேட்ட மருத்துவமனை ஊழியரை இறந்தவரின் உறவினர்கள் சரமாரியாக அடித்து துவைத்து விட்டனர்.
சென்னை வியாசர்பாடி கன்னிகா புரத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ்வின் சென்ட். உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜார்ஜ்ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்க டாக்டர்கள்பரிந்துரைத்தனர்.அவரை ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச் செல்ல மருத்துவனை வார்டு பாய் மோகன் என்பவர் 100 ரூபாய்லஞசம் கேட்டார். இதையடுத்து உறவினர்கள் அவருக்கு பணம் கொடுத்து ஸ்கேன் மையத்திற்கு ஜார்ஜைகொண்டு சென்றனர்.
ஸ்கேன் எடுத்த இடத்தில் ஜார்ஜ் இறந்து போனார். இதையடுத்து உடலை சவக் கிடங்குக்கு எடுத்துச் செல்லடாக்டர்கள் கூறினார். அதே மோகனே சவக் கிடங்குக்கு ஜார்ஜ் உடலை எடுத்துச் செல்ல வந்தார். ஆனால்இப்போதும் அவர் 100 ரூபாய் கொடுத்தால் தான் உடலை கொண்டு செல்வேன் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் ஜார்ஜின உறவினர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். ஏற்கனவே தனது அண்ணன் இறந்தசோகத்தில் இருந்த ஜார்ஜின் தம்பி புஷ்பராஜ், ஊழியர் மோகனை சரமாரியாக தாக்கினார். கூட இருந்தஉறவினர்களும் மோகனை அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மனிதாபிமானமே இல்லாமல் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இப்படி எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்பதாஎன்று ஜார்ஜின் குடும்பத்தினரும், உறவினர்களும் கூறினர். இதுகுறிதது புஷ்பராஜ் போலீஸில் புகார்கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியரிடம் மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications