கலாம் விமானத்துக்கு மிரட்டல்-5 பேர் சிக்கினர்
சென்னை:
ஜனாதிபதி அப்துல் கலாம் செல்லவிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்ததாக 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் மடக்கியுள்ளனர்.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த அப்துல் கலாம்,திங்கள்கிழமை இரவு 11.45 மணிக்கு டெல்லிக்குத் திரும்புவதாக இருந்தார்.இந் நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மிரட்டல் தொலைபேசிவந்தது. அதில் பேசிய நபர் ஆளுநரின் விமானத்தில் குண்டு வைக்கப்படிருப்பதாகக்கூறினார். ஆளுநர் சென்னையில் தானே இருக்கிறார், அவர் எங்கும்போகவில்லையே என போலீசார் குழம்பினர்.
இதையடுத்து மீண்டும் போன் செய்த அந்த நபர் ஆளுநரின் விமானம் அல்லகுடியரசுத் தலைவர் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.குடித்து விட்டு பேசுவது போல அவரது பேச்சு இருந்துள்ளது. இரண்டாவதுமுறைஅந்த நபர் பேசிய போது, செல்போன் மூலம் பேசியுள்ளார்.
இதனால் விமான நிலையமே அதிர்ச்சியில் மூழ்கியது. டிஜிபி முகர்ஜி, மாநகரஆணையர் லத்திகா சரண் ஆகியோர் விமான நிலையம் விரைந்தனர். வெடிகுண்டுநிபுணர்கள் மோப்ப நாய்கள் சகிதம் விமானத்தில் சோதனை நடத்தியதில் குண்டுஎதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து அதிகாலை 2 மணிக்கே கலாம் டெல்லி கிளம்பிச் சென்றார். குடியரசுத்தலைவர் விமானத்துக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது மத்தியஉளவுத்துறை போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
மிரட்டல் விடுத்தவர்களைப் பிடிக்க மாநில சைபர் கிரைம் போலீஸாரும் மத்தியஉளவுப் பிரிவினரும் களமிறங்கினர்.
மிரட்டல் தொலைபேசி வந்த எண்ணைமுதலில் கண்டுபிடிக்கமுடியவில்லை.காரணம், வெறும் 800 என்ற எண் மட்டுமே காலர் ஐ.டியில் பதிவாகி இருந்தது. அதுடாடா இன்டிகாம் போனில் இருந்து வந்தது தெரியவந்தது.
அதை வைத்து டாடா இன்டிகாம் என்ஜியர்களின் உதவியோடு சம்பந்தப்பட்டஎண்ணை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அதை வைத்து சென்னை புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரி அருகே உள்ளஅய்யஞ்சேரி ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், ராஜு, ராஜன், சுரேஷ்,பாலமுருகன் ஆகியோரை வளைத்துப் பிடித்தனர். இவர்களில் ஒருவர் தான் மிரட்டல்விட்டவர் என்று போலீசார் கருதுகின்றனர்.
இவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications