புலிகளை ஆதரிக்கும் வைகோவை கூட்டணியில்இருந்து நீக்க ஜெ. தயாரா?: கிருஷ்ணசாமி
சென்னை:
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வைகோவை கூட்டணியில் இருந்து நீக்க அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா தயாரா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது,வைகோ மூலமாக விடுதலைப் புலிகளுடன் ஜெயலலிதா தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது என்றுசிதம்பரத்தில் நான் பேசினேன். 2 நாட்கள் அமைதியாக இருந்த ஜெயலலிதா ஆண்டிப்பட்டிக்கு சென்று நான்கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பழைய சம்பவங்களை பற்றி பேசி இருக்கிறார்.
அவர் ஆட்சியில் இருந்த போது விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக பேசிய வைகோவை பொடா சட்டத்தில்கைது செய்து சிறையில் அடைத்தார். மதிமுகவை தடை செய்ய வேண்டும் என்று கூறினார். இப்போது வைகோவிடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கூறுகிறார்.
ஆனால் ஜெயலலிதா வைகோவை கண்டித்தாரா? ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதா விடுதலைப் புலிகளைஎதிர்ப்பதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார். இப்போது ஆட்சியில் இல்லை. ஆனால் அமைதிகாத்துக்கொண்டு இருக்கிறார்.
வைகோவை அன்பு சகோதரர் என்று சொல்கிறார். வயதில் மூத்த அவரை அப்படிசொல்லட்டும். ஆனால் 83 வயது நிரம்பிய கலைஞரை அழகு சுந்தரம் என்று கேலிசெய்திருக்கிறார். இது சரியா?
இன்று விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வைகோவை இவர் தடுக்காதது ஏன்? இதுஎங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்படுவதற்கு முன்பு விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை ஜெயலலிதாசந்தித்து பேசினார். ஆனால் இதுவரை அது பற்றி எந்த விளக்கமும் அவர்அளிக்கவில்லை. நான் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவர் தமிழ்நாட்டுக்கு வருவதுபாதுகாப்பு இல்லை என்று கருதித்தான் அவருடன் ஒரே மேடையில் பேசும்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஜெயலலிதா புறக்கணித்தார் என்றுசட்டசபையிலேயே தம்பித்துறை பேசி இருக்கிறார்.
ராஜீவ் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நீங்கள் முன்பே தெரிந்திருந்தால்அதனை தடுக்கும் முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை. இதையெல்லாம் ஆராயும்போதுதான் உங்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கான பதிலை எப்போதுசொல்வீர்கள். உங்கள் ஆதரவுடன் நெய்வேலியில் உண்ணாவிரதம் இருந்த டைரக்டர்பாரதிராஜாவும், இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்திருக்கிறார். அதற்கும் பதில்சொல்ல வேண்டும்.
2004ல் வைகோ காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது ஒரு இடத்தில் கூடவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசவில்லை. ஆனால் இப்போது பேசுவது உங்கள்ஆதரவால்தானா? நீங்களும் தீவிரவாதத்துக்கு துணை போகிறீர்களா? விடுதலைப்புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு இல்லை என்றால் அதற்கு ஆதரவு கொடுப்பதாககூறும் வைகோவை அதிமுக கூட்டணியில் இருந்து விலக்க தயாரா?
பாமக எங்களுடன் உறவு வைத்திருக்கும் போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகபேசவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார்கள்.
வீரப்ப மொய்லியை ராமதாஸ் குறை கூறியிருக்கிறார். அது தவறு. மதிமுகவை மத்தியகூட்டணியில் இருக்கும் படி நாங்கள் வற்புறுத்தவில்லை. அவர்களதுநடவடிக்கைகளை மேலிடத்துக்கு தெரிவிப்போம்.
தமிழ்நாட்டில் காங்கரஸ் சார்பில் கோபி செட்டிபாலையம், நெல்லை, வேலூர் அல்லதுஏதாவது ஒரு மாவட்டம் உள்பட 3 இடங்களில் மண்டல மாநாடுகளை நடத்த முடிவுசெய்திருக்கிறோம். இதற்கு சோனியாவிடம் தேதி கேட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications