தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் எச்சரிக்கை
டெல்லி:
நாடு முழுவதிலும் உள்ள முக்கிய இடங்களை தற்கொலைப் படைதாக்குதல் மூலம்தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் உஷார்நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனைநடத்தினார். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தீவிரவாதிகளின் தாக்குதல்கள்தொடர்பாக முதல்வர்களுடன் விரிவாக விவரித்தார். பிரதமர் இக் கூட்டத்தில்பேசுகையில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் அதாவது வழிபாட்டுத் தலங்கள்,பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், முக்கிய கல்வி நிறுவனங்கள்,ஆய்வு நிறுவனங்கள், அணு உலைகள், ராணுவ முகாம்களில் தற்கொலைப் படைமூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதுதொடர்பானமுக்கிய தகவல்கள் மத்திய உளவுத்துறைக்குக் கிடைத்துள்ளது.எனவே அனைத்து மாநில முதல்வர்களும் தங்களது மாநிலங்களில் உள்ள இந்தமுக்கிய இடங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும்காவல்துறை உஷார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
பெரிய தீவிரவாத அமைப்புகள் தவிர சிறிய அளவில் இயங்கும் தீவிரவாதஅமைப்புகளையும் கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளூர் போலீஸாரும், உளவுத்துறையினரும் தங்களுக்குக் கிடைக்கும்தகவல்களை உரிய முறையில் பரிமாறிக் கொண்டு ஒருங்கிணைந்து செயல் படவேண்டும்.
காவல்துறையினர் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சிறந்தகாவலர்கள் இருக்கும் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை வெகுவாக கட்டுப்படுத்தமுடியும். காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்பமாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புலனாய்வு அமைப்புகளை நவீனப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். இதில்கம்ப்யூட்டர் மயமாக்கம் மிகவும் அத்தியாவசியமானது. சேகரிக்கப்படும்தகவல்களை நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு அமைப்புகளோடு பகிர்ந்து கொள்ளஇது உதவும் என்றார் பிரதமர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications