2 மணிப்பூர் தீவிரவாதிகள் கோவையில் கைது!
கோவை:
கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிப்பூரைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை மணிப்பூர்போலீஸார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரை பிரித்து தனி நாடாக ஆக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய தேசிய விடுதலைப் படை என்றஅமைப்பு போராடி வருகிறது. இதே அமைப்புடன் இணைந்த மக்கள் விடுதலைப் படை என்ற அமைப்புதீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.இவற்றை பயங்கரவாத அமைப்பாக மணிப்பூர் அரசு அறிவித்து அவற்றுக்கு தடை விதித்துள்ளது. இந்தஇயக்கத்தினரின் செயல்பாடுகளை மணிப்பூர் போலீஸார் மற்றும் ராணுவம் ரகசியமாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தோம்பா என்பவர் கோவை கங்கா மருத்துவனையில்ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம், மணிப்பூர் போலீஸாரும்தோபாவை பிடிக்க வலை விரித்தன்.
மாறு வேடத்தில் கோவை வந்த அவர்கள், தோபா அங்கு சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து மருத்துவமனையை முற்றுகையிட்ட அவர்கள் தோபாவை கைது செய்தனர். அவருடன்சிகிச்சை பெற்று வந்த சலாம் மங் என்கிற இன்னொரு தீவிரவாதியும் பிடிபட்டான்.
50 கோவை போலீஸார் உதவியுடன் இரு தீவிரவாதிகளையும் மணிப்பூர் போலீஸாரும், ராணுவ அதிகாரிகளும்வளைத்துப் பிடித்தனர். இவர்கள் இடமிருந்து 35,000 பணம், 2 செல்போன்கள், லேபடாப் கம்ப்யூட்டர்கள்,புகைப்படங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களை மணிப்பூர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் ரகசியாக சிகிச்சைபெற்று வந்த தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோம்பா முதுகு வலியில் அவதிப்பட்டு வந்தான். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக முதலில் பெஙகளூர்சென்றான். அங்கிருந்து வேலூர் வந்தான். அங்கு சிகிச்சை பெறுவதை விட கோவயில் உள்ள கங்காமருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் நல்லது என்று தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கங்காமருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வந்தான்.
போட்டோம் என்ற பெயரில் மருத்தவமனையில் சேர்ந்த தோம்பா சிகிசசை பெற்று வந்தான். இவன் தீவிரவாதிஎன்பது மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாது என்று கூறப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications