2 மணிப்பூர் தீவிரவாதிகள் கோவையில் கைது!
கோவை:
கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிப்பூரைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை மணிப்பூர்போலீஸார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரை பிரித்து தனி நாடாக ஆக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய தேசிய விடுதலைப் படை என்றஅமைப்பு போராடி வருகிறது. இதே அமைப்புடன் இணைந்த மக்கள் விடுதலைப் படை என்ற அமைப்புதீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.இவற்றை பயங்கரவாத அமைப்பாக மணிப்பூர் அரசு அறிவித்து அவற்றுக்கு தடை விதித்துள்ளது. இந்தஇயக்கத்தினரின் செயல்பாடுகளை மணிப்பூர் போலீஸார் மற்றும் ராணுவம் ரகசியமாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தோம்பா என்பவர் கோவை கங்கா மருத்துவனையில்ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம், மணிப்பூர் போலீஸாரும்தோபாவை பிடிக்க வலை விரித்தன்.
மாறு வேடத்தில் கோவை வந்த அவர்கள், தோபா அங்கு சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து மருத்துவமனையை முற்றுகையிட்ட அவர்கள் தோபாவை கைது செய்தனர். அவருடன்சிகிச்சை பெற்று வந்த சலாம் மங் என்கிற இன்னொரு தீவிரவாதியும் பிடிபட்டான்.
50 கோவை போலீஸார் உதவியுடன் இரு தீவிரவாதிகளையும் மணிப்பூர் போலீஸாரும், ராணுவ அதிகாரிகளும்வளைத்துப் பிடித்தனர். இவர்கள் இடமிருந்து 35,000 பணம், 2 செல்போன்கள், லேபடாப் கம்ப்யூட்டர்கள்,புகைப்படங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களை மணிப்பூர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் ரகசியாக சிகிச்சைபெற்று வந்த தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோம்பா முதுகு வலியில் அவதிப்பட்டு வந்தான். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக முதலில் பெஙகளூர்சென்றான். அங்கிருந்து வேலூர் வந்தான். அங்கு சிகிச்சை பெறுவதை விட கோவயில் உள்ள கங்காமருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் நல்லது என்று தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கங்காமருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வந்தான்.
போட்டோம் என்ற பெயரில் மருத்தவமனையில் சேர்ந்த தோம்பா சிகிசசை பெற்று வந்தான். இவன் தீவிரவாதிஎன்பது மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications