22 வங்கிகள்: 1.5 கோடி ஸ்வாஹா-பலே ஆசாமி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலியான ஆவணங்களைக் கொடுத்து 22 வங்கிகளில் ரூ.1.5 கோடி பணத்தைமோசடி செய்த பலே ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் மீதுஏராளமானோர் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில் போலியான ஆவணங்களைப்பயன்படுத்தி பண மோசடியில் சுப்ரமணி ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். அவர் மீதானபுகார்களில் உண்மை இருந்ததால் சுப்ரமணியை போலீஸார் கைது செய்யமுடிவுசெய்தனர். ஆனால் சுப்ரமணி தலைமறைவாகி விட்டார். அவரை தீவிரமாக தேடி வந்தபோலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுப்ரமணியிடமிருந்து போலி நில பத்திரங்கள்கைப்பற்றப்பட்டன. இவர் போலியான நில ஆவணங்களை வங்கிகளில் காட்டி கடன்என்ற பெயரில் பண மோசடி செய்துள்ளார். மொத்தம் 22 வங்கிகளில் ரூ.1.5 கோடிஅளவுக்கு இவ்வாறு சுருட்டியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து நாகப்பட்டனம் அருகே இறால் பண்ணைஒன்றையும் வைத்துள்ளார் சுப்ரமணி.












Click it and Unblock the Notifications