வைகோ மீது காங். எம்.எல்.ஏ. போலீஸில் புகார்
வேலூர்:
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மதிவாணனை நேரில் சந்தித்துஞான சேகரன் அளித்துள்ள புகாரில், கடந்த 4ம் தேதி வேலூரில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தோம், இன்றும் ஆதரிக்கிறோம், நாளையும்ஆதரிப்போம் என பேசியுள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் தலைவர்பிரபாகரன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முதல் குற்றவாளி.அவரை ஆதரித்து வைகோ வெளிப்படையாக சென்னை, ஆரணி போன்ற இடங்களில்பேசியுள்ளது தேச விரோத குற்றமாகும்.
வேலூரில் அவர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தேச விரோதகுற்றமாகும். எனவே வைகோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கைகாக்க வேண்டுமென்று கூறியுள்ளார் ஞானசேகரன்.
இதேபோல முதல்வர் கருணாநிதிக்கும் ஞானசேகரன் ஒரு புகார் மனுவைஅனுப்பியுள்ளார். ஏற்கனவே சென்னையில் பேசியதற்காக வைகோ மீது நடவடிக்கைஎடுக்க கோரி காங்கிரஸ் பிரமுகர் பால் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குபோட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications